எட்டு மைல் சுரங்கம் : மறைந்திருந்த வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது.!!
யான்கீ குவாரி என அழைக்கப்படும் பகுதியில் மறைந்திருந்த வரலாற்று ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார் ஆய்வாளர். அமெிர்கக ராணுவ வீரர்கள் கைவண்ணத்தில் வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் நிறைந்த எட்டு மைல் நீளம் கொண்ட சுரங்கம் ஒன்றினை மார்க் அஸ்காட் என்பவர் கண்டறிந்துள்ளார்.

01
முதலாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்க ராணுவ படையினர் வடக்கு பிரான்ஸ் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

02
பயணங்களின் போது பாதுகாப்பாக இருந்திட காட்டுப் பகுதிகளில் எட்டு மைல் தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைத்தனர்.

03
வழியெங்கும் பூமியின் அடியில் துளையிட்டு போரின் போது அங்கு வெவ்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

04
இப்பணிகள் அனைத்தும் காலத்தோடு மறைந்திருந்தன.

05
இப்புகைப்படத்தில் அமெரிக்க ராணுவத்தினர் தாங்கள் அமைத்த சுரங்கத்தின் நுழைவு வாயிலில் நிற்பதைக் காண முடியும்.

06
நிலப்பகுதியின் மேல் அதிகப்படியான தாக்குதல்கள் நடைபெற்றதால் புகலிடம் தேடுவது அதிக ஆபத்தான ஒன்றாக இருந்தது.

07
அமெரிக்க வீரர்களுக்குக் கிடைத்த ஒரே வழி மறைகுழிகளில் மிகவும் தாழ்வாக மறைந்து கொள்வது தான்.

08
இதோடு நிலப்பரப்பில் ஓய்வு என்ற பேச்சுக்கே வழியில்லாமல் இருந்தது.

09
இன்று வரை சுரங்கங்களில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முழுமையாக மறக்கடிக்கப்பட்டு விட்டது.

10
இருந்தும் பல ஆண்டுகளுக்குப் பின் அஸ்கத் முயற்சியால் அனைத்து வரலாறுகளும் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

11
இச்சுரங்கங்களில் சுமார் 200க்கும் அதிகமான சிற்பங்களை அதில் தங்கியிருந்த வீரர்கள் செதுக்கியுள்ளனர்.

12
சில வீரர்கள் தங்களது சிற்பங்களுக்கு அழகாக இருக்கும்படி நேர்த்தியாகவும் செதுக்கியுள்ளனர்.

13
சில சிற்பங்கள் பெருமைக்கான அங்கீகாரமாக காட்சியளிக்கின்றது.

14
அச்சுறுத்தல் நிறைந்த வில்லன் போன்ற முகம்.

15
வீரர்கள் தங்கியிருந்ததை நினைவூட்டும் சிற்பங்கள்.

16
மிகவும் ஆபத்தான காலக்கட்டங்களிலும் அழகான சிற்பங்களை வீரர்கள் செதுக்கியுள்ளனர்.

17
சில சிற்பங்கள் முழுமையாக முடிக்கப்பெறவில்லை என்றாலும், பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

18
இந்த சிற்பம் கட்டுமான சின்னமாக காட்சியளிக்கின்றது.

19
அமெரிக்க வீரர்களில் பலரும் அதிக திறன் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்.

20
சுரங்கங்களில் உறக்கம் கொண்ட சில வீரர்களின் முகம்.


Click it and Unblock the Notifications