Just In
- 4 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 5 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 5 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 6 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒருவழியாக, மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பது உறுதி செய்யப்பட்டது..!
மனித வாழ்க்கை சார்ந்த ஆயிரமாயிரம் அறிவியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டாலும், மனிதனின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கிறது..? என்னவாகும்..? என்ற மர்மமான அதே சமயம் சுவாரசியமான கேள்விக்கு நிகராக எந்த ஆய்வும் இல்லை என்பதே நிதர்சனம்.
ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!
அப்படியான ஒரு தேடுதலை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட மிகப்பெரிய அறிவியல் ஆய்வின் படி , இறந்த பிறகு என்னவாகும் என்ற கேள்விக்கான விடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!
4 ஆண்டு :
பிரிட்டன் நாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வாளர்கள் அணி மாரடைப்பு நோயாளிகளை தொடர்ச்சியாக அதாவது கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.
40 சதவீதம் பேர் :
மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர், மருத்துவ ரீதியாக அவர்கள் இறந்துவிட்டனர் என்று அறிவித்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் "விழிப்புணர்வில்" இருந்ததாகவும் சில வடிவங்கள் கண்டதாகவும் விவரித்துள்ளனர்.
20 முதல் 30 நொடிகளில் :
நிபுணர்கள்படி, இதய துடிப்பு நின்ற அடுத்த 20 முதல் 30 நொடிகளில் மூளை இயக்கம் நின்று போகும், அதன் பின்பு எதை பற்றிய விழிப்புணர்விற்கும் சாத்தியமே இல்லை .
குழப்பம் :
அப்படியிருக்க உயிர்பிழைத்தவர்கள் கூறும் அந்த விழிப்புணர்வு என்பது என்ன..? எதை பற்றிய எச்சரிக்கையாக அது இருக்க வேண்டும்..? என்ற குழப்பம் எழுந்தது.
மூன்று நிமிடங்கள் வரை :
சமீபத்திய ஆய்வின் மூலம் மருத்துவ ரீதியான இறப்பிற்கு பின்னர் நோயாளிகள் மூன்று நிமிடங்கள் வரையிலாக உண்மையான நிகழ்வுகள் ஏற்படுவதை உணர்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
ஒரு முறை மட்டுமே :
உடன் நோயாளிகள் புத்துயிரளிக்கப்பட்ட பின்பு ஒரு முறை மட்டுமே தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பற்றிய நினைவை துல்லியமாக பெறுகின்றனர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புதியதொரு கோணம் :
பொதுவாக இதுபோன்ற ஆய்வுகளில் உருவெளித்தோற்ற நிகழ்வுகளை மட்டுமே நோயாளிகள் காண்பார்கள் ஆனால் சமீபத்திய ஆய்வு முற்றிலும் புதியதொரு கோணத்தை வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார் நியூயார்க்கின் மாநில பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், இந்த ஆராய்ச்சியை முன் நடத்துபவருமான டாக்டர் சாம் பரினா.
நோயாளி :
இந்த ஆய்வில் ஒரு நோயாளியை மீள் உயிர் பெற வைக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சி செய்த போது அவர் (நோயாளி) என்ன நடக்கிறது என்ற ஒரு "மிகவும் நம்பகத்தனமான" தகவலை அளித்துள்ளார்.
அறையின் ஒரு மூலையில் :
அதாவது மருத்துவ அறையின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு நான் சுவாசம் செய்துகொண்டிருந்தை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
விழிப்புணர்வு நிலை :
வழக்கமாக இதயம் நின்ற பின்பு மூளை செயல்பட முடியாது. ஆனால், இந்த விஷயத்தில், விழிப்புணர்வு நிலை சுமார் மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்துள்ளது.
2060 நோயாளிகள் :
இதன் மூலம் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கை ஒன்று இருப்பதின் துப்பு கிடைக்கப் பட்டுள்ளதாகவே கருதப் படுகிறது. இந்த ஆய்வில் இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மருத்துவமனைகளில் இருந்து 2,060 நோயாளிகள் உட்படுத்தபட்டுள்ளனர்.
46 சதவீதம் :
அவர்களில் உயிர் பிழைத்த 46 சதவீதம் பேர் ஒரு பரந்த அளவிலான மன நினைவுகளின் அனுபவம் பெற்றுள்ளனர்.
2% பேர் :
அவர்களில் ஒன்பது சதவீதம் மரணத்தின் அருகாமை அனுபவத்தின் பாரம்பரிய வரையறைகளை அனுபவித்துள்ளனர், 2% பேர் உடலுக்கு வெளியே உள்ள அனுபவங்களை அதாவது தன் உடலை தானே பார்ப்பது போன்ற வெளிப்படையான விழிப்புணர்வு நிகழ்வுகளை அனுபவித்துள்ளனர்.
மேலும் படிக்க :
நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!
பெர்முடா முக்கோணத்திற்குள்ளே : புதிய சர்ச்சை கிளப்பும் ஜெர்மன் கடல் ஆய்வாளர்..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
ஹிட்லர் மரணம் : மரணிக்காத சந்தேகங்கள்.!?
1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30, ஆம் தேதி ஜெர்மனி நாட்டின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் மரணித்ததாக இன்றைய வரலாற்றுப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன.
இவர் சைனைடு மாத்திரை உட்கொண்டு துப்பாக்கி மூலம் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து மரணித்ததாகக் கூறப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றாலும் ஹிட்லர் மரணம் குறித்த சந்தேகம் இன்றளவும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
ஹிட்லர் மரணம் குறித்து பல்வேறு சதியாலோசனை கோட்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளையும், விளக்கங்களையும் முன் வைக்கின்றன, அவற்றில் சர்ச்சைக்குரிய சில கோட்பாடுகள் ஸ்லைடர்களில்..!
கோட்பாடு
ஹிட்லர் யு-கப்பல் மூலம் அண்டார்டிகா சென்றுவிட்டார்
அண்டார்டிகா
ஹிட்லர் நாஸிக்களால் கடத்தப்பட்டு அண்டார்டிகாவில் இருக்கும் ரகசிய கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டதாக இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது. பின் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் 1950'களில் அணு ஆயுதம் கொண்டு ஹில்டர் வாழ்ந்ததாக அறியப்படும் ரகசிய கோட்டை தகர்க்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றது.
நம்பகத்தன்மை
பெரும்பாலானோரும் இந்தக் கோட்பாட்டினை நம்பினாலும், சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர், இவர்கள் யு-கப்பல் மூலம் அண்டார்டிகாவிற்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் ஜெர்மனிக்குச் சொந்தமாக அங்கு எவ்வித தளமும் இல்லை என்கின்றனர்.
கோட்பாடு
ஹிட்லர் அர்ஜென்டினா தப்பிச்சென்று பராகுவேவில் தங்கி இருந்தார்.
பிரபல எழுத்தாளரும் 'Hitler: His Life and His Death' என்ற புத்தகத்தை எழுதியவருமான சிமோனி ஹிட்லர் மரணிக்கவில்லை என்றும் அவர் யு-கப்பல் மூலம் அர்ஜென்டினா சென்று பராகுவே எனும் சிறிய நகரில் அடால்ஃப் லெய்ப்ஸிக் எனும் பெயரில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் குறிப்பிட்ட நகரத்தினை தேர்வு செய்து அங்குச் சென்றதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட வரைபடம் கொண்டு புதையல் ஒன்றைத் தேடியதாகவும் சிமோனியின் கோட்பாடு தெரிவிக்கின்றது.
கோட்பாடு
ஹிட்லர் ராக்கெட் மூலம் நிலவிற்கு சென்று விட்டார்.
காரணம்
பூமியே வெறுக்கும் மனிதர், மனிதர்களுக்கு எதிராய் பல்வேறு குற்றங்களைப் புரிந்த நபர் பூமியை விட்டு வெளியேறி வேற்றுக் கிரகத்தில் வாழ்வதைத் தவிர என்ன செய்ய முடியும் என்ற கேள்வியின் அடிப்படையில் இயற்றப்பட்டது.
வாழ்க்கை
மேலும் போர் முடிந்ததும் ஹிட்லர் நிலவுக்குச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததாக இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது. இதைப் பறைசாற்றும் விதமாக நாஸிக்கள் ஏலியன்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோட்பாடு
ஹிட்லர் தன்னையே நகலி செய்து கொண்டு தென் அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.
தொழில்நுட்பம்
1945களில் ஜெர்மனியின் தொழில்நுட்பங்களை வைத்து இந்தக் கோட்பாடு இயற்றப்பெற்றுள்ளது. இதில் மருத்துவர். ஜோசஃப் மென்கெல் என்பவரின் உதவியோடு ஹிட்லர் தன்னை வெற்றிகரமாக நகலி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உயிர் இயக்கவியல் முறையில் அதிக விருப்பம் கொண்ட ஹிட்லர் போரின் இறுதிக்காலங்களில் வெற்றிகரமாகத் தன்னை நகலி செய்து தென் அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாட்டை தழுவி நாவல் ஒன்றும் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹிட்லர் ரகசிய சுரங்கம் மூலம் தப்பிச்சென்று நிரந்திரமாக மறைந்துவிட்டார்.
இந்தக் கோட்பாடு ஹிட்லர் மரணிக்கவில்லை என்றும் அவர் பியூரர் பதுங்கு அறையின் கீழ் இருந்த ரகசிய சுரங்கம் வழியாகத் தப்பிச்சென்று தென் துருவத்திற்குப் பறந்து சென்றதாகக் கூறுகின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470