பூமியில் மனித-ஏலியன் கலப்பினம் வாழ்கின்றது.!!
உலகில் பதில் கிடைக்காத பல விஷயங்களில் முக்கியமானதாக இருப்பது ஏலியன்கள் தான். பூமியில் ஏலியன்கள் வாழ்ந்து வருகின்றது என ஆய்வாளர்களும், யுஎஃப்ஒ வல்லுநர்களும் அடிக்கடி கூறி வரும் நிலையில் இவர்களின் கருத்துகளுக்கு இன்று வரை யாரும் தெளிவான விளக்கமும் பதிலும் அளிக்கவில்லை.
ஏலியன்கள் இருப்பதே இன்று வரை கேள்விகுறியாக இருக்கும் நிலையில் பூமியில் மனித-ஏலியன் சமூகம் அதிகரித்து வருவதாக மிக்யெல் மென்டோன்கா என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கலப்பினம்
சக மனிதர்களின் உடலில் ஏலியன் மரபணு செலுத்தப்பட்டு பலர் நம்முடன் உலகில் வாழ்ந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சியை ப்ரிஸ்டலை சேர்ந்த ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

நோய்
கலப்பினங்களுடன் அதிக தொடர்பு இருக்கும் போது எம்எஸ் எனும் நோயில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தியதாக இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்எஸ் நோய்
இந்த எம்எஸ் நோய் ஏற்ப்பட்டால் உடலில் நரம்பியல் கோளாறுகள், உடல் வலி, தசை வலி, மன ரீதியான பிரச்சனை ஏற்படும்.

மேலாளர்
மென்டோன்கா, வோர்ல்டு பியூச்சர் கவுன்சிலின் முன்னால் ஆய்வு மேலாளராக பணியாற்றியதோடு பசுமை சக்தி குறித்து அதிகளவில் எழுதியிருக்கின்றார்.

புத்தகம்
இவரது சமீபத்திய படைப்பு தான் Meet The Hybrids: The Lives And Missions of ET Ambassadors On Earth, அமேசான் மூலம் வெளியிடப்பட்டது. இப்புதகத்தை இணைந்து எழுதயவர் பார்பரா லேம்ப்.

நேர்காணல்
இந்த புத்தகத்திற்காக, உடலில் ஏலியன் டிஎன்ஏ பொருத்தப்பட்ட எட்டு பேருடன் நேர்காணல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வாளர்
லேம்ப் 1980 முதல் ஏலியன் சார்ந்த ஆய்வுகளில் ஈடுப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டம்
'ஆய்வை துவங்கும் போது எவ்வித குழப்பமும் இவ்லை, ஆனால் ஆய்வினை முடிக்கும் போது, யுஎஃப்ஒ'க்கள் பூமிக்கு வந்து செல்வது குறித்த உண்மை வெளியாகியுள்ளது' என மென்டோன்கா தெரிவித்துள்ளார்.

கலப்பினம்
மனித-ஏலியன் கலப்பினங்களானது அதிர்வு மற்றும் மக்களை விழிப்படைய செய்கின்றது. மேலும் இந்த திட்டமானது மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது என மென்டோன்கா தெரிவித்துள்ளார்.

பேச்சு
மனித-ஏலியன் கலிப்பனங்களுடன் பேசும் போது வித்தியாசமான உணர்வு ஏற்படும் என்றும் அவர் கூறுகின்றார்.

ஆய்வு
மனித-ஏலியன் கலப்புடையவர்களிடம் ஒரே வகையான கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு
மனிதர்களில் செலுத்தப்பட்டிருக்கும் ஏலியன் மரபணுக்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகையான ஏலியன்களுடையது என்பதும் தெரியவந்துள்ளது.

ஏலியன்
ஏலியன் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இது போன்ற ஆய்வுகள் உதவியாக இருக்கும் என்றே கூற வேண்டும்.

மேலும் படிக்க

முகநூல்
இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

ஏலியன் இருப்பது உண்மை : நாசா அதிகாரி தகவல்.!!
வேற்றுகிரக வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவலாக இருப்பதில்லை என்பதால் இது குறித்து யாரும் அதிகம் கவலை கொண்டதில்லை.
எனினும் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள் இருப்பது உண்மை என்பதை விளக்கும் சான்றுகளை பலமுறை வெளியிட்டு இருக்கின்றனர். இன்றும் பல்வேறு காரணங்களால் இவை குறித்த தகவல் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

தகவல்
நிலைமை இப்படி இருக்க வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றனர் என்ற வாக்கில் பல நாசா ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாசா
பல்வேறு நாசா ஊழியர்களும் ஏலியன் இருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து வரும் நிலையில் நாசா அதிகாரப்பூர்வமாக இத்தகவலை உறுதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிர்ச்சி
இந்நிலையில் உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக நாசாவின் தலைமை ஆராய்ச்சியாளர் எல்லென் ஸ்டோஃபன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தகவல்
ஏலியன் இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியிடப்படலாம் என வேற்றுகிரக வாசம் சார்ந்த சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உண்மை
இதனிடையே ஸ்டோஃபன் அறிக்கையானது ஏலியன் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேரம்
நம் வாழ்நாள் நிறைவடையும் முன் நமது பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசம் இருப்பதை புரிந்து கொள்வோம் என ஸ்டோஃபன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை
இத்தகவல் ஆனது பூமியை தவிர மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசம் இருப்பது நிச்சயம் உண்மை என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை உணர்த்துவதாகவே இருக்கின்றது.

வீரர்
அப்போலோ 14 திட்டத்தின் மூலம் விண்வெளி சென்ற வீரர் தன் பேட்டியில் ஏலியன் இருப்பது உண்மை என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்
இதோடு வேற்றுகரக வாசிகள் இருப்பது குறித்த தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளதோடு, அரசாங்கம் மற்றும் நாசா இணைந்து ஏலியன் இருப்பதை மறைக்கின்றன என்ற குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகின்றது.

ஆதாரம்
முன்னதாக 2011 ஆம் ஆண்டில் நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் ஏலியன் இருப்பதை தான் நம்புவதாகவும், ஆனால் இதற்கு தன்னிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.

கருத்து
இது குறித்து டாக்டர் மிட்செல் கூறியதாவது, 'உலகில் ஏலியன் இருப்பதை மறைக்க நாசா எது வேண்டுமானாலும் செய்யும்' என தெரிவித்திருந்தார்.

கென் ஜான்ஸ்டன்
கென் ஜான்ஸ்டனும் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ இருப்பது குறித்த தகவல்களை வெளியிட்டார்.

ஆதாரம்
தகவல்களை மட்டும் வெளியிட்ட கென் ஆதாரங்களை வெளியிட மாட்டேன் என கூறினார், இத்தகவல் வெளியானதும் அவர் தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

விண்வெளி மையம்
சர்வதேச விண்வெளி மையத்தின் நேரலை கேமராவில் இருந்து, அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தெரிவது பலமுறை மறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதமும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சில வினாடிகள் காணப்பட்டது, எனினும் இதுவும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.

யுஎஃப்ஒ
சர்வதேச விண்வெளி மையம் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் யுஎஃப்ஒ காணப்பட்டது பதிவு செய்யப்பட்ட நிலையிலும் இது குறித்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications