'பாவப்பட்ட' சொதோம் - கொமோரா அழிவு, புவியியல் பிரளயம் அல்ல..!?
அதியாகமத்தின் படி சொதோம் மற்றும் கொமோரா (Sodom and Gomorrah) என்ற இரண்டு நகரமும் அந்நகரவாசிகளின் பாவங்களுக்காக கடவுளால் அழிக்கப்பட்ட இரண்டு நகரங்களாகும். எபிரேய மொழியில் சொதோம் என்பது "எரிக்கப்பட்ட" என்றும், கொமோரா என்பது "அழிக்கப்பட்ட மேடு" எனவும் பொருள் படும். இதன் மூலம் இப்பெயர்கள் இந்நகரங்களின் அழிவுக்குப் பிறகு இவற்றுக்கு வழங்கப்பட்டப் பெயர்கள் என்பது உறுதியாகிறது.
"ஆண்டவர் வானத்திலிருந்து கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்" அதனால் இந்நகரங்கள் அழிந்தன என்று நம்பும் ஒரு கூட்டமிருக்க மறுபக்கம் இந்த இரண்டு நகரங்களும் அதி நவீன ஆயுதங்களால் அழிக்கப்பட்டன என்கிற நம்பிக்கையும் உண்டு..!

கோட்பாடு :
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன இந்த நகரங்கள் சமீபத்தில் வரலாற்று நகரங்கள் பற்றி எழுந்த பல்வேறு கோட்பாடுகளில் முன்மொழியப்பட்டு இருப்பதை வைத்து இந்நகர்களின் தளங்கள் உத்தேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பேரழிவு தோற்றம் :
டெட் சீ (Dead Sea) ஆனது இரண்டு இணை புவியியல் தவறுகளால் உண்டான ஒரு பள்ளமான தொகுதியாகும். அதாவது ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி இதுவொரு பேரழிவு தோற்றம் குறிக்கும் அமைப்பாகும்.

நீர் :
இந்த வித்தியாசமான அமைப்புக்கு நீர் காரணமாக இருக்க வாய்ப்பில்லை உடன் டெட் சீ என்பது ஒரு கடல் அல்ல ஏரி என்பதால் மிக அசாத்தியமான ஒரு அமைப்பாக இது கருதப்படுகிறது.

முறிவுகள் :
மியோசீன் காலத்தின் படி (அதாவது 7 மில்லியன் -0 26 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ) சில இயற்கை செயல்முறைகளின் விளைவாக உருவான முறிவுகள் தான் டெட் சீ ஏரி எனப்படுகிறது. அதாவது சோதோம் கொமோரா அழிப்பு ஒரு தனியான சம்பவம் அல்ல, இதனுடன் இணைப்பு கொண்டது என்று நம்பப்படுகிறது.

சம்பவம் :
சில ஆராய்ச்சியாளர்களின்படி சோதோம் கொமோரா 4000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு ஹிரோஷிமா-நாகசாகி சம்பவம் என்றே கூறப்படுகிறது.

நிலை :
டெட் சீயின் மேற்பரப்பு மற்றும் கரையானது கடல் மட்டத்திற்கு கீழே 429 மீட்டர் ( 1,407 அடி) என்ற நிலையில் உள்ளது இது பூமியின் மிக குறைந்த உயரத்தில் உள்ள இடமாகும். உடன் 304 மீ ( 997 அடி) ஆழம் என்பதால் இது உலகின் மிகவும் ஆழமான உயர் உப்பு ஏரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷ வாயு :
அரபு மரபு படி, ஏரியின் மேலே பறவைகள் பறக்க முடியாத வண்ணம் அபாயகரமான விஷ வாயுக்களின் ஆவிஏரியில் இருந்து வெளியாகிறது என்றும் நம்பப்படுகிறது.

புவியியல் பிரளயம் :
இந்த டெட் சீ உருவாக்கம் மற்றும் சொதோம் - கொமோரா நகரங்களின் அழிவானது டெக்டானிக் தட்டின் இயக்கம் அல்லது எரிமலை போன்றவைகளால் நேரவில்லை என்பதால் இவை ஒரு புவியியல் பிரளயம் அல்ல என்பதே பலரின் வாதம்.

அணு ஆயுதம் :
ஆக இந்த பேரழிவு தெய்வீக மனிதர்கள் தலையீடு காரணமாக, அல்லது சிலர் பரிந்துரைக்கும்படி வேற்று கிரக மனிதர்களின் அணு ஆயுதம் போன்ற அதிநவீன ஆயுதத்தினால் தாக்கியதின் மூலமாக ஏற்பட்டு இருக்கலாம் என்ற கோட்பாடுகள் எழுந்துள்ளன.

மகாபாரத போர் :
மகாபாரத போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா..? - என்பதை பற்றி விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் படிக்க :
பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா சொல்வதை நம்பலாமா..??
1000 பகுதிகளாக பிரிக்கப்பட்ட புத்தரின் உடல் மிச்சங்கள், சிக்கிய தங்கப்பேழை..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications








