Just In
- 10 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 10 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 11 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 12 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
2 மணி நேரம் பூமியின் காந்தப்புலம் 'செயலிழந்தது' உண்மையா..?!
காந்தப்புலம் (Magenetic Field) என்பது விண்வெளியில் உள்ள ஏதேனும் ஒரு விண்வெளி பொருளை சுற்றி காணப்படும் பிரதேசமாகும், இப்பிரதேசத்தின் மின்னூட்டத் துகள்களை (Charged Particles) பயன்படுத்தி விண்வெளி பொருளால் தன்னகத்தே ஈர்க்கப்பட்டு அவ்வான் பொருளின் காந்தப்புலத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்த காந்தபுல பிரதேசமானது விண்வெளியின் அருகாமையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வெளியிடப்படும் பிளாஸ்மா கதிரினால் காந்தப்புலக்கோடுகள் மின் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகலாம். குறிப்பாக பூமியின் காந்தப்புலமானது சூரியப்புயல் போன்றவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படுகின்றது. அப்படியான, பூமியின் காந்தப்புலம் 'செயலிழந்தது' என்று சதியாலோசனை கோட்பாட்டு ஒன்று வெளியாகி பீதியை கிளப்பி உள்ளது.
செயல்படவில்லை :
கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பூமியின் காந்தப்புலம் செயல்படவில்லை என்றும் இது பூமி கிரக இறப்பின் ஆரம்பம் என்றும் தகவல்கள் வெளியாகின.
பூமி கிரகம் :
பூமியின் காந்தப்புலம் தான் நம்மை சூரிய காற்று மற்றும் அதிகப்படியான கதிர்வீச்சு போன்றவைகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொண்டிருக்கிறது. அது செயல் இழந்தால் அல்லது தகர்ந்து போனால் பூமி கிரகம் பெரிய அளவிலான தாக்கத்தை எதிர்கொள்ளும்.
காரணம் :
செவ்வாய் கிரகம் மிகவும் மோசமான வறண்ட கிரகமாக இருக்க சூரியப்புயல் தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது, காந்த புலம் இல்லையெனில் பூமிக்கும் அதே நிலை ஏற்படலாம்.
வானிலை கணிப்பு மைய தரவுகள் :
நாசாவின் வானிலை கணிப்பு மைய தரவுகள், கடந்த 23 ஆம் தேதி 6.37 ஜிஎம்டி முதல் 8.39 ஜிஎம்டி வரையிலாக பூமியின் காந்தப்புலம் தகர்ந்து போனதாய் தெரிவிக்கிறது.
2 மணி நேரத்திற்கும் மேலாக :
அதாவது கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் மோசமான விளைவுகளை உண்டாக்க கூடிய சூரியனிடம் இருந்து, பூமி கிரகம் பாதுகாக்கப்படாது இருந்துள்ளது.
கதிர் வீச்சு :
இதுபோன்ற தற்காலிகமான காந்தப்புல செயல் இழப்பானது, தொழில்நுட்ப பாதிப்புகள், விமான கண்காணிப்பு போன்றவைகளில் ஆரம்பித்து பூமி கிரக ஜீவராசிகளுக்கு அதிக அளவிலான கதிர் வீச்சு வரையிலாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பூகம்பங்கள் :
சூப்பர்ஸ்டேஷன்95 என்னும் சதியாலோசனை கோட்பாட்டு வலைத்தளம் ஆனது "காந்தப்புல செயலிழப்பு ஆனது பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், எதிர்பாராத கடல் நீரோட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான அலைகள் ஆகியவைகளை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.
தரவு புகைப்படங்கள் :
தொடர்ந்து மற்றொரு சதியாலோசனை கோட்பாட்டு வலைத்தளம் ஸ்னோப்ஸ்.காம், பூமி கிரகம் காந்தப்புலம் மூலம் பாதுக்காக்கப்படும் போது மற்றும் காந்தப்புலம் செயல் இழந்த போதும் என்று இரண்டு தரவு புகைப்படங்களையும் வெளியிட்ட்டது.
மென்பொருள் சிக்கல் :
இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்ட நாசா, வெளியான வானிலை கணிப்பு மைய தரவுகள் ஒரு மென்பொருள் சிக்கலால் (monitoring software glitch) உருவானதே ஒழிய, பூமியின் காந்தப்புலம் செயல் இழந்த தால் ஏற்படவில்லை என்று எல்லா பீதிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மோசமான உள்ளீடு தரவு :
"வெளியான இரண்டு தரவு புகைப்படங்கள் ஆனது மோசமான உள்ளீடு தரவு (Bad Input Data) மூலம் சிதைந்து போனதால் உருவானது" என்றும் நாசா விளக்கமளித்துள்ளது.
கவலை :
எது எப்படி இருந்தாலும் காந்தப்புலம் சார்ந்த விடயத்தில் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் விண்வெளி ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
15% :
மறுபக்கம் ஆய்வுகள் "காந்தப்புலம் ஆனது கடந்த 200 ஆண்டுகளில் 15% வலுவிழந்துவிட்டது" என்கின்றன.
மேலும் படிக்க :
சூரிய புயல் தாக்கினால் இதுதான் உலகின் கதி..!?
ப்ஹோபோஸ் நிலவில் 'மோனோலித்' - எந்த நாகரீகத்தின் தவறிய பாகம்..?!
நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470