வானில் காட்சியளித்த கடவுள், உலகின் முதல் புகைப்படம் வெளியீடு.?
விண்வெளி சார்ந்த விஷயங்கள் அனைத்தும் புதிதாய் இருப்பதால், இவை வெளியாகும் போது பெரும்பாலானோரையும் குழப்பி விடுகின்றது. இதற்கு முக்கிய காரணமாக 'தகவல் பரிமாற்றத்தை' தான் கூற வேண்டும். ஒருவர் கூறும் தகவலானது மற்றொருவரிடம் துவங்கி பலருக்கும் பகிர்ந்து கொள்ளப்படும் போது இது போன்று நடைபெறுகின்றது.
இவ்வாறு கடவுள் உலகில் இருப்பது பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும், இவை சார்ந்த சரியான புரிதல் இன்றும் இல்லை என்பதே உண்மை.
கடவுள் இருக்கிறார், தப்பு செய்பவர்களை தண்டிப்பார், என்றும்
கடவுளா? அப்படி ஏதும் இல்லைப்பா.! என்றும் பல கருத்துக்கள் இருக்கலாம்.
ஆனால் கடவுள் இருக்காருங்க, இந்த போட்டோவை பாருங்க, என்கிறார் ஸ்காட் சி வாரிங்..

புகைப்படம்
கடவுளின் முதல் புகைப்படம் உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

முகம்
ஐரோப்பாவின் விண்வெளி மையம் கரினா நெபுலாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

நெபுலா
கரினா நெபுலாவானது பூமியில் இருந்து 6500 மற்றும் 10,000 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றது.

வாயு
நெபுலாவானது தூசு, ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற ஐயோனைஸ்டு வாயுக்களால் நிறைந்துள்ளது.

மேகம்
இந்த புகைப்படமானது மேகங்களில் தோன்றும் முகம் போன்ற உருவமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில் இந்த கருத்திற்கு பிரபல யுஎஃப்ஒ நிபுனரான ஸ்காட் வாரிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நிகழ்வு
சிலர் இந்த புகைப்படமானது பேரெய்டோலியா நிகழ்வாக இருக்கலாம் என்கின்றனர். இந்நிகழ்வானது மேகங்களில் மனிதர்கள், விலங்குகள் அல்லது சின்னங்களை பார்க்க வழி செய்வதாகும்.

தொலைவு
இந்த முகமானது பூமியில் இருந்து 162 மில்லியன் மைல் தொலைவில், அதாவது பூமியில் இருந்து வீனஸ் செல்லும் தூரத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஸ்காட் தெரிவித்துள்ளார்.

சந்தேம்
வாரிங் ஏற்படுத்தியிருக்கும் யூகங்கள் கடவுள் ஒரு வேலை ஏலியனாக இருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பிளவு
இந்த கண்டுபிடிப்பு மேகங்களில் ஏற்பட்ட பிளவும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஆண்
இந்த புகைப்படத்தில் தெரியும் மிகவும் பிரகாசமான முகம் நீல நிறத்தில் இருப்பதோடு இது ஓர் ஆண் என்றும் ஸ்காட் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

புகைப்படம் :
இதே போன்று கடவளின் கை போன்ற உருவம் விண்ணில் தென்பட்டப்போது அதை நாசா பதிவு செய்திருந்ததும் குறிபிடத்தக்கது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புகைப்படம் எடுத்துள்ளது.

வெடிப்பு :
நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது.

டெலஸ்கோப் :
அந்த காட்சியை நாசாவின் நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப் அர்ரே (Nuclear Spectroscopic Telescope Array) புகைப்படம் எடுத்தது.

எக்ஸ்-கதிர்கள் :
புகைப்படத்தில் உயர் ஆற்றல் எக்ஸ் கதிர்கள் (high-energy X-rays) நீள நிறத்திலும், குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலும் தெரிகிறது என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

விளக்கம் :
வெடிப்பில் வெளியான பருப்பொருட்கள் நிஜமாகவே கை போன்ற வடிவத்தை உருவாக்கியதா அல்லது பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா என்பது பற்றிய விளக்கம் இல்லை.

வைரல் :
இருப்பினும் விண்ணில் தோன்றிய இந்த உருவம் 'கடவுளின் கை' என்று பெயர் சூட்டப்பட்டு வைரல் ஆகியது.

மேலும் படிக்க :
பின்னணி : 13,000 ஆண்டுகள் பழைமையான மர்ம விண்கலம்..!
கபளிகரமான 'விபரீதத்தில்' முடிந்திருக்க வேண்டிய 5 சோதனைகள்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications