Just In
- 3 min ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ஸ்பாஷியல் ஆடியோ.. மல்டி கனெக்டிவிட்டி.. நாய்ஸ் ரெடக்சன்.. 400mAh பேட்டரி!
- 1 hr ago மார்ச் 30 குள்ள ஆர்டர் போட்ருங்க.. இப்படி ஒரு டிஸ்கவுண்ட் பார்த்ததே இல்ல.. iPhone 15 முதல் iPhone 12 வரை!
- 2 hrs ago நிலவுக்கு புது பெயர் வைத்த மோடி.. 7 மாதத்திற்கு பிறகு ஓகே சொன்ன உலக நாடுகள்.. என்ன பெயர் தெரியமா?
- 2 hrs ago கூவி, கூவி விற்கும் அமேசான்.. 16ஜிபி ஸ்டோரேஜ்.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் ரெட்மி 4கே டிவி..
Don't Miss
- News புஸ்ஸாயிடுச்சே.. பாஜக மேல இவ்ளோ வெறுப்பா? ஆசை ஆசையாக கூட்டணி வெச்சாங்களே.. இதென்ன புதுஸா? திமுக குஷி
- Movies என்னது டாப்சிக்கு ரகசிய திருமணமா?.. 10 ஆண்டு காத்திருப்பாம்.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
- Automobiles எலெக்ட்ரிக் காரை தூர விடுங்க! டாடா காத்துலயே போற காரை கண்டுபிடிக்கபோறாங்களாம்!
- Lifestyle அடிக்கடி இந்த அறிகுறிகளை சந்திச்சா அசால்ட்டா இருக்காதீங்க... உயிரைப் பறிக்கும் நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
- Finance கண்ணை மூடிக்கொண்டு பணத்தை கொட்டும் டாடா.. ஓசூரில் அடுத்த முக்கிய திட்டம்..!!
- Sports ஆஷிஷ் நெஹ்ரா கொடுத்த அட்வைஸ்.. சுப்மன் கில் பக்கா கேப்டன்சி மெட்டீரியல்.. குஜராத் இளம் வீரர்!
- Education ஜேஇஇ அட்வான்ஸுடு நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற டிப்ஸ்கள் இதோ...!!
- Travel தென் தமிழகத்தின் சொர்க்கத்துக்கு ‘விசிட்’ பண்ண மறக்காதீங்க...!
களவு பயம் இனி எதற்கு? அதிநவீன கருவி வந்தாச்சு.!
இந்த கருவியானது மிகவும் நேர்த்தியானது மற்றும் சிறியதும் கூட. வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணைம் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி 35% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஒரு தாயும் மகளும் தங்களின் கண்டுபிடிப்பான DAZL மூலம் இந்த மோசமான புள்ளிவிவரங்களை மாற்ற முனைகின்றனர்.
ஒரு சிறிய ஐ.ஓ.டி கருவியான இந்த டாசில்(DAZL),பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணரும் போது ஒன்று அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு சாஸ் (SOS) எச்சரிக்கையை அனுப்ப அனுமதிக்கிறது. "உலகம் முழுக்க பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் சமசரசெய்யக்கூடிய மற்றும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையிலேயே உள்ளனர். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார் டாசில்-ன் இணை நிறுவனர் அதிதி.
இந்த கருவியானது மிகவும் நேர்த்தியானது மற்றும் சிறியதும் கூட. வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு பெண்ணைம் பாதுகாப்பாக உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. " எங்களுடைய பணியானது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நம்மையுடைய மற்றும் பயமில்லாத பெண்கள் உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே" என மேலும் தொடர்கிறது.
சாஸ் எச்சரிக்கைகளை அனுப்புவது மட்டுமில்லாமல், அதிலுள்ள பட்டனை அழுத்தி பிடிப்பதன் மூலம் அதிக ஒலியெழுப்பி தாக்க முயல்பவர்களை பயமுறுத்தவும் பயன்படுகிறது. மேலும் டாசில் பற்றி கூறும் போது, வியரபல் டெக்னாலாஜி மற்றும் ஐ.ஓ.டி யை பயன்படுத்தி, பேசன் ஜூவல்லரிகள் மூலம் பெண்களின் தனித்துவ தேவைகளான பாதுகாப்பு, சௌகரியம், ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கை அனைத்தும் தரமுடியும் என்கிறார்.
இந்த சிறிய கருவியானது பயனர்களின் ஒரு நாளுக்கான பல்வேறு தேவைகளை பூர்த்திசெய்யும் பல அம்சங்களை கொண்டுள்ளது. எளிதாக ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பாதுகாப்பாக சென்றடைந்துவிட்டேன் என்பதை எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பாமல் தெரிவிக்க முடியும்.
டாசில் தான் பெண்களுக்களின் பாதுகாப்பிற்காக உள்ள ஒரே கருவி எனக் கூறிவிட முடியாது. சந்தை முழுவதும் பெப்பர் ஸ்பிரே, மகளிர் பாதுகாப்பு செயலிகள் என பல உள்ளன. இருந்தாலும் இந்த டாசில் மற்றவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்கின்றனர் இதன் நிறுவனர்கள்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 45 நாட்கள் செயல்படக்கூடியதாகவும், பார்க்க கலைநயத்துடன் , பல்வேறு அம்சங்களை கொண்டதாகவும் உள்ளது என்கிறார் அதிதி. மேலும் இந்த டாசில் கருவியில் சாவி போன்ற தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது. பெண்கள் பாதுகாப்பற்ற சூழுநிலையில் இருக்கும் போது கைப்பேசி கூட பயன்படுத்த இயலாத நிலையில்இந்த கருவியை பயன்படுத்தி, நீங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை சாஸ் எச்சரிக்கை வாயிலாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப முடியும்.
மேலும் இந்த கருவி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற முக்கிய தினசரி நோட்பிகேசன்களை அனுப்பவல்லது.இதை எளிதில் கீசெயின், கைப்பை அல்லது உடையில் கூட எளிதாக வைத்துக்கொள்ளலாம்.
முதலில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏராளமான வெளிநாட்டு ஒப்பந்தங்களை பெற்றுவந்த நிலையில், தற்போது இந்தியாவில் இதன் சந்தை பெருமளவில் வளர்ந்து வருகிறது. "இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு என்பது பெரிய கவலையாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் 90% பிரச்சனைகள் வெளியில் தெரிவதேயில்லை".
மேலும் இந்நிறுவனம் ஐரோப்பியா மற்றும் ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் கால்பதிக்க உள்ளதாக அதிதி. ஐரோப்பியா மற்றும் ஐப்பானில் இருந்து ஏராளமான ஒப்பந்த விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவற்றை சரி பார்த்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470