Home
How to

ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கஷ்டம் இருக்காது.!

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட மிகப் பெரிய பொதுத்துறை என்று கூறினால், அது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகும். இந்த வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஹெல்ப் லைன் உள்ளிட்ட பல வசதிகளை செய்திருக்கிறது. அது ஆன்லைன் பேங்கிங் காரணமாக இன்று வங்கி பரிவர்த்தனைகள் மிகவும் சுலபமாகியிருக்கின்றன.

 பரிவர்த்தனைகள்

குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகள் பெருகிவிட்டதால், நமது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது, என்பதை கண்டறிவதுஅடிக்கடி தேவையான ஒன்றாக இருக்கிறது. இதற்காக வங்கிக்கு செல்வது அல்லது ஏடிஎம் மையத்தில் சென்று பார்ப்பது ஆகியன ஒவ்வொரு செயலுக்கும் அதிக நேரம் எடுக்கும் என்றே கூறலாம்.

வங்கிக் கணக்கில் இருக்கும்

ஆனால் இதற்காகவே வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அறிந்துகொள்ள வாடிக்கையாளர்களுக்கு சுலப வசதிகளை வங்கிகள் உருவாக்கி இருக்கின்றன. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் மிஸ்டு கால் மூலமாக தங்களது இருப்புப் பணத்தை தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் தாங்கள்

அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தாங்கள் வங்கி கணக்கில் பதிவு செய்து வைத்திருக்கும் செல்போன் எண்ணில் இருந்து 09223766666 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதுமானது, அல்லது ‘BAL' என டைப் செய்து எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

ணம் இருப்பு தொடர்பான

மேலும் வங்கியில் பணம் இருப்பு தொடர்பான மினி ஸ்டேட்மெண்ட் தேவைப்படுவோர் 09223866666 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவேண்டும்,அல்லது ‘MSTMT' என டைப் செய்து எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போது. பின்பு மேற்படி வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 ஸ்டேட் பாங்க் ஆஃப்

முன்னதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய தங்களது வாடிக்கையாளர்களுக்கு இருப்புத் தொகை கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்தது. அது நகரங்களில் இருப்பவர்கள் ரூ.3000, நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.2000, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்தது. அதற்கு குறைவாக வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இது அதன் வாடிக்கையாளர்கள் 44 கோடிக்கும் மேல் உள்ள வாடிக்கையாளர்களை பாதிக்கும் என இந்தஅறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. அதோடு எம்சிஎல்ஆர் கட்டணத்தையும் இந்த வங்கி குறைத்து அறிவித்தது அதன் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

எஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு

இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது இந்த அறிவிப்பானது புதுக்கிப்பட்ட மொபைல் எண் மற்றும மெயில் ஐடியை வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குடன் இணைக்க வேண்டும் என்ற வகையில் இருக்கிறது. இப்படி செய்வது என்பது வங்கிக் கணக்குகளில் தங்களது பரிவர்த்தனை குறித்து அறிவதற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் வங்கிகளில் இருந்து வேறுயாராவது கணக்கர்களின் அனுமதியின்றி பணம் எடுத்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

News Source: livemint.com

Best Mobiles in India

English summary
SBI Bank Balance Check: How to Get SBI Bank Balance via Missed Call: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X