டிஆக்டிவேட் ஆன 11.44 லட்சம் பான் கார்டுகளில் உங்களுடையதும் ஒன்றா.? செக் செய்வதெப்படி.?
இப்போது 11.44 லட்சம் பான் அட்டைகள் செயலிழந்தது என மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் நிதி அமைச்சர் சந்தோஷ் குமார்.
இந்தியாவில் தற்சமயம் அதிக மக்கள் பான் அட்டைகளை பயன்படுத்துகின்றனர், வங்கி சார்ந்த சில முக்கிய இடங்களில் இதன் பயன்பாடுகள் அதிகமாக உள்ளது.
இப்போது 11.44 லட்சம் பான் அட்டைகள் செயலிழந்தது என மாநிலங்களவைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் நிதி அமைச்சர் சந்தோஷ் குமார். போலி விபரங்கள் மற்றும் போலி அடையாளங்கள் போன்றவற்றை கொடுத்து சிலர் பான் அட்டைகளை பெற்றுள்ளனர். இருந்தபோதிலும் பல மக்களின் பான் அட்டைகள் பயன்படாமல் போனது.
உங்கள் பான் அட்டை செல்லுபடியாகுமா என்பதை சரிபார்க்க சில வழிமுறைகள் உள்ளது. அதை பின்வரும் ஸ்லைடர்களில் பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற வலைதளத்திற்க்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2:
பின்பு அந்த பான் வலைதளத்திற்க்குள் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, தொடர்பு எண், போன்ற விவரங்களைநிரப்ப வேண்டும்.

வழிமுறை-3:
விவரங்களை கொடுத்து கிளிக் செய்த பின்பு உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒடிபி எண் அனுப்பிவைக்கப்படும்.

வழிமுறை-4:
அடுத்து கொடுத்த ஒடிபி எண்ணை அந்த வலைதளத்தில் பதிவிட வேண்டும்.

வழிமுறை-5:
உங்களிடம் தனிப்பட்ட விவரங்கள் ஒன்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பான்
அட்டை இருந்தால், ஒரு பாப்-அப் செய்தி தோன்றும் .

வழிமுறை-6:
அந்த வலைப்பக்கத்தில் உங்கள் பான் அட்டை செயலில் இருக்கிறதா எனத் தெரிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications