இன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.?
பணமில்லா பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படும் 'பேடிஎம்' ஆப்பினை இன்டர்நெட் வசதி இல்லாமல் பயன்படுத்துவது குறித்த தகவல்கள் கீழே.
மத்திய அரசின் பெரு மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லதென்ற அறிவிப்பு,பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்குக்குப் பிறகு பணமில்லா பரிவத்தனைக்காகவும்,பணப்பரிமாற்றத்திற்காகவும் மக்களால் பல வகையான ஆப்ஸ்கள் இந்த செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டது.
அவற்றில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இந்த 'பேடிஎம்' ஆப் ஆகும்.இதனை அதிகப்படியான மக்கள் தங்களது பணமில்லை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்காகவும் பயன்படுத்தினர்.
இந்த ஆப்பினை இன்டர்நெட் வசதி இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எளிய வழிகள் உங்களுக்காக.

அக்கௌன்ட்:
இணைய வசதி இல்லாமல் பேடிஎம் வழியே பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்காக முதல் வழி உங்களுக்கான பேடிஎம் கணக்கினை துவக்குவதுதான்.பியூச்சர் போன்களில் இதற்கான கணக்கினை துவக்க இயலாது எனவே,அக்கௌன்ட் துவக்குவதற்காக ஸ்மார்ட்போன் அல்லது கணினி ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

உங்களது வங்கி கணக்குடன் இணைத்துக்கொள்ளுங்கள்:
புதிதாக துவக்கப்பட்ட பேடிஎம் கணக்குடன் உங்களது வங்கி கணக்கு விவரங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.இதற்கான தகவல்கள் அனைத்தும் நீங்கள் கணக்கு துவக்கையிலேயே காண்பிக்கப்படும்.

கால்:
இப்போது பேடிஎம் கணக்கு துவக்கிய மொபைல் எண்ணிலிருந்து 1800-1800-1234 என்ற எண்ணிற்கு கல் செய்யுங்கள்.இது இலவச எண் ஆகும்.

பின் மற்றும் கடவு எண்:
நீங்கள் அந்த இலவச எண்ணிற்கு கல் செய்தவுடன் உங்கள் அழைப்பு தானாக துண்டிக்கப்பட்டு சில வினாடிகள் கழித்து அவர்கள் தரப்பிலிருந்து ஓர் அழைப்பு வரும் அதனை ஆன் செய்து அதில் குறிப்பிடப்படுகிற வகையிலான வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்கான பின் மாறும் கடவு எண் ஆகியவற்றை அமைத்துக்கொள்ளவேண்டும்.

எளிதாக:
இப்போது எந்த எண்ணிற்கு பணப்பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டுமோ அதனை உள்ளிட்டு எவ்வளவு ரூபாய் எனக் குறிப்பிட்டு எளிதாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க
ஜியோசாட் மூலம் பணப்பரிமாற்றம்.!


Click it and Unblock the Notifications