கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்! இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?
தற்போது போன்பே,பேடிஎம், கூகுள் பே போன்ற செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது இதுபோன்ற செயலிகள் நமது தினசரி வேலைகளை எளிமையாக்கி உள்ளது.

சிறிய ரக பொருட்கள்
அதேபோல் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

ரீசார்ஜ்
குறிப்பாக போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட்
அதேபோல் நீங்கள் எதாவது ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய பின்னர், பணம் செலுத்தப் போகும் போது அந்த இடத்தில் உங்களது மொபைலில் இன்டர்நெட் செயல்படவில்லை என்றால் என்ன செய்ய முடியும்? கவலை வேண்டாம் இன்டர்நெட் இல்லை என்றாலும் கூட எளிமையாகப் பணம் செலுத்த முடியும்.
அதாவது இப்போது உங்களது போன் மூலம் இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண் UPI உடன் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல் உங்களுடையவங்கிக் கணக்கும் அதே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வழிமுறை-2
அடுத்து உங்களது போனை எடுத்து *99# என்பதை டயல் செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்பு உங்களது போனில் send money, request money, check balance, my profile, pending requests, transactions, UPI PIN போன்ற விருப்பங்கள் தெரியும்.

வழிமுறை-4
மேலே உள்ள விருப்பங்களில் send money என்பதை தேர்வு செய்யவும்.

வழிமுறை-5
நீங்கள் send money என்பதை தேர்வு செய்தவுடன் இந்த 4 ஆப்ஷன்கள் கிடைக்கும்.
1.mobile no
3.upi id
4.save beneficiary
5.ifsc, account number

வழிமுறை-6
இந்த நான்கு விருப்பங்களில் நீங்கள் upi id என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்து நீங்கள் சரியான upi id-ஐ கொடுத்து, எவ்வளவுபணம் செலுத்த வேண்டும் என்பதை டைப் செய்து எளிமையாக அனுப்பலாம்.

முக்கிய குறிப்பு
இந்த வழிமுறைகள் மூலம் ரூ.5000 வரை மட்டுமே அனுப்பமுடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த வழிமுறைகள் ஜியோவை தவிர்த்து
மற்ற அனைத்து நெட்வொர்க்குகளிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜியோவில் எல்டிஇ நெட்வொர்க் இருப்பதால்USSd-ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

யுபிஐ ஆப்ஸ்கள்
மேலும் இந்தியாவில் தற்போது யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் இந்த யுபிஐ ஆப்ஸ்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக முக்கிய நகரங்கள் தொடங்கி உள்ளூர் சந்தைகள் வரை
அனைத்து இடங்களிலும் இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்க துவங்கியுள்ளனர்.

பாதுகாப்பு அம்சங்கள்
அதேபோல் UPIஆப்ஸ்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதாவது UPI ஆப்ஸ் சேவைக்கான பாதுகாப்பு PIN ஐடியை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். குறிப்பாக அது உங்கள் நண்பராக இருந்தாலும், குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி, யாருடனும் பின் எண்களை மட்டும் ஒருபோதும் பகிர்ந்து விடாதீர்கள்.

குறிப்பாக சரிபார்க்கப்படாத கணக்குகள் அல்லது தெரியாத தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சலில் இருந்து உங்கள் போனிற்கு வரும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள்.
UPI பேமெண்ட் ஆப்ஸை எப்போதும் தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டே இருங்கள். இது உங்கள் பாதுகாப்பையும், UPI ஆப்ஸின் பயனர் அனுபவத்தையும் மேம்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications