அடடே இது இவ்ளோ ஈஸியா? Apps பயன்படுத்தாமல் வீடியோவை ஆடியோவாக மாற்றுவது எப்படி?
இப்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப்ஸ்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்குகிறது என்றே கூறலாம்.

தீங்கிழைக்கும் ஆப்ஸ்
ஆனாலும் ஒரு சில ஆப் வசதிகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில ஆப் வசதிகளை நமது தனிப்பட்ட தகவல்களை திருடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கூகுள் நிறுவனம் அவ்வப்போது தீங்கிழைக்கும் ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய வண்ணம் உள்ளது.

வீடியோ File
சரி இப்போது விஷயத்துக்கு வரும். அதாவது ஒரு வீடியோ File-ஐ ஆடியோவாக மற்ற நாம் இத்தனை நாள் கண்டிப்பாக கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்ஸ்களை தேடியிருப்போம். ஆனால் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்களை உதவியின்றி வீடியோவை ஆடியோவாக எளிமையாக மாற்ற முடியும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு போன்களில் எந்த ஆப்ஸ்களையும் பயன்படுத்தாமல் எளிமையாக வீடியோ File-ஐ ஆடியோவாக மாற்ற முடியும். மேலும் இப்போது அதற்கான வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் உங்களது ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் File Manager-க்கு செல்லவும்.

வழிமுறை-2
அடுத்து உங்களது File Manager-இல் இருக்கும் வீடியோ பகுதிக்கு செல்லவும். இப்போது நீங்கள் எந்த வீடியோவை ஆடியோவாக convert செய்ய வேண்டுமோ அதை செய்யவும்.

வழிமுறை-3
இப்போது நீங்கள் தேர்வு செய்த வீடியோ File-ஐ Rename கொடுக்க வேண்டும். அதாவது நீங்கள் தேர்வுசெய்த வீடியோவில் Song.mp4 என்று இருக்கும், அதை நீங்கள் Song.mp3 என்று மாத்தினால் போதும்.

வழிமுறை-4
குறிப்பாக உங்களது போனில் வீடியோ File-ஐ Song.mp3 மாத்தினாலே போதும், அது இப்போது ஆடியோ வடிவில் கிடைக்கும்.

லோன் அப்ளிகேஷன்கள்
மேலும் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் ஆன்லைன் மூலம் கடம் பெறும் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களைஎச்சரித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஆன்லைன் மூலமாக கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள் அதிகரித்துவிட்டன என்றுதான் கூறவேண்டும். அதுவும் குறைவான சிபில் ஸ்கோஸ்கோர் இருந்தாலே போதும் என்று கூறி சில மோசடி கும்பல் தங்கள் வேலைகளை காட்டத்துவங்கிவிடுவர்.

அதேபோல் சில லோன் அப்ளிகேஷன்களில், வாங்கிய பணத்தை விட அதிகமான பணத்தை கட்டும்படி நச்சரிக்கும் இந்த கும்பல், ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவோம் என்றும் மிரட்டவும் செய்வதாக காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா
குறிப்பாக சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்து வந்த 4 நபர்களை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த 4 நபர்கள் கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஷங்கர் ஜிவால், ஆன்லைன் லோன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபசமாக சித்தரித்து மிரட்டிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
எனவே இதுபோன்ற பிரச்சனைகள் தரும் ஆப்ஸ்களை நமது போனில் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications