உங்க போனில் Paytm பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.!
பேடிஎம், போன்பே, கூகுள் பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக நாம் மளிகை கடை முதல் உணவகங்கள் வரை நாம் எங்கு சென்றாலும் ஆன்லைன் பரிவர்த்தனைகளையே மேற்கொள்கிறோம்.

ஆன்லைன் பேங்கிங் முறை
அதாவது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது. அதேபோல் பணமாக கையில் எடுத்து செல்வதை விட ஆன்லைன் பேங்கிங் முறை எளிதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போன்பே, பேடிஎம்
மேலும் போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற செயலிகள் பயனருக்கு பணம் அனுப்பவும் பெறவும், மொபைல், டி.டி.எச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகளை எந்த வெளிப்புற தொந்தரவும் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

சூப்பரான சலுகைகள்
குறிப்பாக இந்த போன்பே, பேடிஎம், கூகுள் பே போன்ற நிறுவனங்கள் கேஷ்பேக், வவுச்சர் எனப் பல சலுகைகள் வழங்குகின்றன. எனவே தான் இந்த செயலிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பேடிஎம்
மேலும் உங்களது ஸ்மார்ட்போன் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ, உங்களது பேடிஎம்-ஐ தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சூழலில் உங்களது பேடிஎம்-ஐ எப்படி Block செய்வது என்பதை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் பேடிஎம் Paytm Payments Bank உதவி எண் 01204456456-ஐ அழைக்கவும்.

வழிமுறை-2
அடுத்து lost phone எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும். அதன்பின்பு ஐவிஆர்-ஐ கவனமாக கேட்டு,உங்களதுதொலைந்து போன மொபைல் எண்ணை உள்ளிடவும்.

வழிமுறை-3
இதை தொடர்ந்து எல்லா கேட்ஜெட்டுகளில்இருந்தும் உங்கள் பேடிஎம் கணக்கிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-4
அதன்பின்பு பேடிஎம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான paytm.com-க்கு செல்லவும். அங்கு 24×7 உதவி விருப்பத்தை தேர்வு செய்யவும். அடுத்து Report a Fraud என்பதை கிளிக் செய்தால் பல விருப்பங்கள் வரும்.

வழிமுறை-5
பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களில் உங்களுக்கு தேவையான 'போன் தொலைந்துவிட்டது" என்ற விருப்பமும் வரும், அதை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் பேடிஎம் கணக்கின் உரிமைக்கான ஆதாரத்தை இங்கே சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பேடிஎம் கணக்கு பரிவர்த்தனை விவரங்கள் போன்றவை தான்.
அதன்பிறகு நீங்கள் ஒரு உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். அதை தொடர்ந்து உங்கள் கணக்கை பேடிஎம் நிறுவனம் தற்காலிகமாக தடுத்துவிடும்.

தொழில்நுட்ப வளர்ச்சி
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எதிர்பார்க்காத அளவிற்கு பல கட்டங்கள் முன்னோக்கி வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் தங்களை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவின் முக்கிய கொள்கையான டிஜிட்டல் இந்தியா கொள்கை பல கட்டங்கள் முன்னோக்கி வருகிறது. அதில் பிரதான ஒன்றாக இருப்பது டிஜிட்டல் பரிவர்த்தனை.

டிஜிட்டல் பரிவர்த்தனை
குறிப்பாக சிறிய கடை முதல் பெரிய கடை வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய பொருள் வாங்கினால் கூட ஸ்கேனர் போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வி அனைவராலும் கேட்கத் தொடங்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம்.

அதேபோல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு என கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் ஆப் என பல இருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைப்பது யூபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்பேஸ் தான். அதாவது யூபிஐ ஆனது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் சேவையாகும். இந்த சேவையானது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களிலும் பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications