பங்கு சந்தை முக்கிய விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறுவது எப்படி?
சில சமயங்களில் அனைத்து தகவல்களை அறிந்து கொள்ள வெவ்வேறு தளங்களை பின்தொடர்வது சற்று சவாலான காரியம் தான்.
பங்கு வர்த்தகம் செய்வோர் எந்நேரமும் பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பெரும்பாலானோர் பங்குச் சந்தை விவரங்களை அறிந்து கொள்ள வெவ்வேறு வலைத்தளங்கள் அல்லது செயலிகளை டவுன்லோடு செய்து தங்களுக்கு வேண்டிய விவரங்களை தெரிந்து கொள்வர்.

சில சமயங்களில் அனைத்து தகவல்களை அறிந்து கொள்ள வெவ்வேறு தளங்களை பின்தொடர்வது சற்று சவாலான காரியம் தான். உதாரணத்திற்கு, செயலி அல்லது வலைத்தளம் மூலம் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன்கள்வரும் போது அவை குழப்பமாக இருக்கலாம். வெவ்வேறு பங்குகளுக்கு ஒரே மாதிரியான விவரங்கள் வரும் போது உங்களுக்கே சந்தேகம் ஏற்படலாம்.
இதுபோன்ற சூழல்களில் பழையபடி எஸ்.எம்.எஸ். அலெர்ட்களை தேர்வு செய்வது நல்லதாக இருக்கும். பல்வேறு நன்மைகள் இருந்தாலும் எஸ்.எம்.எஸ். இன்று பெருமளவு பயன்படுத்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது.
சரி, எப்படி பங்குச் சந்தை விவரங்களை சரியாக பெறுவது என்பதை தொடர்ந்து பார்ப்போம்:
இதை செய்ய முதலில், நீங்கள் அதற்கான சேவை வழங்குவோரை தேர்வு செய்ய வேண்டும், பின் அவர்களது நம்பரை பதிவு செய்து அலெர்ட் சேவைகளை ஆக்டிவேட் செய்ய வேண்டும். இவற்றை செய்து முடித்ததும், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

1. ஏதேனும் பிரவுசரை திறந்து, எஸ்.எம்.எஸ். அலெர்ட் ஆப்ஷனை சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயருடன் தேட வேண்டும்
2. இனி, அதிகாரப்பூர்வ இணைய முகவரியை க்ளிக் செய்ய வேண்டும்
3. அடுத்து உங்களின் மொபைல் போன் நம்பர், பெயர் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து சந்தாதாரர் ஆக வேண்டும்
4. இனி, உங்களுக்கு அனைத்து முக்கிய அப்டேட்களும் வரும்

இது ஒருமுறை பயன்படுத்த வேண்டிய வழிமுறை என்பதால், உங்களது மொபைலில் DND சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டு இருந்தால், உங்களுக்கு அப்டேட்கள் எதுவும் வராது.
குறிப்பு: வெவ்வேறு சேவை வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறு வழிகளில் இந்த அம்சத்தை இயக்குவர். இதனால் தேவையான அம்சங்களை சரியாக பூர்த்தி செய்வது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications