உங்கள் ஆதார் கார்டை வேறொருவரால் பயன்படுத்த முடியும்.! அதை கண்டுபிடிப்பது எப்படி.?
குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைத்ததன் மூலம் நாடு முழுவதும் கடந்த 3ஆண்டுகளில் 3கோடி போலிக் குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் விவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன், இந்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டுவந்துள்ளது, மேலும் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்.
ஆதார் மூலம் நாடு முழுவதும் 3கோடி போலிக் குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சோட்டுராம் சவுத்ரி தெரித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் இணைத்ததன் மூலம் நாடு முழுவதும் கடந்த 3ஆண்டுகளில் 3கோடி போலிக் குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு இந்தியாவில் தற்சமயம் சிம் கார்டு முதல் மண்ணெண்ணெய் மானியம் வரை ஆதார் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதார் கார்டை பயன்படுத்தியவர்கள் தகவலை எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் https://resident.uidai.gov.in/ அல்லது aadhar notification history இந்த வலைதளத்திற்குள் செல்ல வேண்டும்.

வழிமுறை-2:
அடுத்து கொடுக்கப்பட்டடுள்ள வலைதளத்தில் ஆதார் சர்வீஸ் எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
பின்பு ஆதார் சர்வீஸ் விருப்பத்தில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும், அதன் பிறகு அதில் கேட்கப்படும் கேப்ட்சா குறீயீட்டை நிரப்ப வேண்டும். மேலும் உங்கள் ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும்.

வழிமுறை-4:
மேலும் அந்த வலைதளத்தில்authentication type (அங்கீகார வகை), தேதி, பதிவுகள் எண்ணிக்கை(50) போன்றவற்றை குறிப்பிடவேண்டும். அதன்பின்பு உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த ஒடிபி-ஐ பதிவு செய்ய வேண்டும்.


வழிமுறை:
அதன்பின்பு இதுவரை நமது ஆதார் கார்டை பயன்படுத்தியவர்கள் தகவலை எளிமையாக பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications