அன்லிமிடட் ஏர்டெல் வாய்ஸ் வெறும் ரூ.148/-க்கு பெறுவது எப்படி.?
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் தொடங்கி வைத்த கட்டண யுத்தத்தின் மற்றோரு பகுதியாக ஏர்டெல் அதன் அன்லிமிடட் வாய்ஸ் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் கட்டண போரின் தீயில் குளிர் காய்வது வாடிக்கையாளர்கள் தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏர்டெல், கடந்த இரண்டு மாதங்களாக சிறப்பான திட்டங்கள் மற்றும் தரவு பொதிகளை அறிமுகம் செய்து எப்படியோ ரிலையன்ஸ் ஜியோ சுனாமியை நல்ல முறையில் எதிர்கொண்டு வருகிறது.

அப்படியான ஒரு ஏர்டெல் திட்டம் தான் சமீபத்தில் அறிமுகம் ஆனது குறிப்பாக அது ஜியோவின் 'இலவச குரல் அழைப்புகள்' திட்டத்தை சமாளிக்கவே களம் இறக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.148/- பேக் ஆனது 1 மாத கால அளவிலான இண்டர்நெட் அடிப்படையிலான வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. உடன் ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த திட்டம் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்லிமிடட் ஏர்டெல் வாய்ஸ் பேக்கை பெற கீழ்வரும் செயல்முறைகளை பின்பற்றவும்.

செயல்முறை #01 : முதலில், நீங்கள் உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணில் இருந்து *121*1# என்ற யுஎஸ்எஸ்டி குறியீட்டை டயல் செய்ய வேண்டும்.

செயல்முறை #02 : பின்னர் நீங்கள் ஒரு பாப்-அப் செய்தி வடிவில் பேக்கின் விவரங்களை பார்பீர்கள், இப்போது பேக்கை உறுதிப்படுத்த எண் 1 அழுத்தவும்.
செயல்முறை #03 : இப்போது உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணில் ரூ.148/- பேக் செயல்படுத்தலாமா என்று கேட்கப்படும். மீண்டும் எண் 1 அழுத்திஅதை நீங்கள் உறுதிப்படுத்த உங்கள் மெயின் பேலன்ஸில் பணம் கழிக்கப்பட்டு பேக் செயல்படுத்தப்பட்ட திற்கான தொலை தொடர்பு ஆப்ரேட்டரின் செய்தி உங்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க
7.25% வட்டி கொடுக்கும் ஏர்டெல் பேங்க், அக்கவுண்ட் ஓப்பன் செய்ய வேண்டுமா.?
கூகுள் சர்ச் லேட்டஸ்ட் அப்டேட் மூலம் கூட்ட நெரிசலை கண்டறிவது எப்படி.?
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications