களிமண் மூலம் சார்ஜ் செய்வது எப்படி.? (எளிய வழிமுறைகள்)
மண் இருந்தால் மின்சாரம் தயரிக்க முடியும் என்றும், இந்த மின்சாரத்தை கொண்டு கைபேசி கருவிகளை சார்ஜ் செய்ய முடியும் என்கின்றனர் மலாவி நாட்டு மக்கள்
'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்ற பழமொழியை தொழில்நுட்ப உலகில் 'மண் இருந்தால் மின்சாரம் உண்டு' என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். மனிதர்களை தாண்டி இன்று அனைவருக்கும் எந்நேரமும் பக்கத்துணையாக இருப்பது ஸ்மார்ட் கருவிகள் மட்டுமே.
மண் இருந்தால் மின்சாரம் தயரிக்க முடியும் என்றும், இந்த மின்சாரத்தை கொண்டு கைபேசி கருவிகளை சார்ஜ் செய்ய முடியும் என்கின்றனர் மலாவி நாட்டு மக்கள். இது எப்படி சாத்தியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தால் முயற்சியும் செய்யலாம்.

ஈர மண்
முதலில் மணலில் நீர் ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.

உருண்டை
ஒரு அடுப்பினை உருவாக்க தேவையான அளவு மணலை உருண்டையாக்க வேண்டும்.

வடிவம்
பின் மண் உருண்டையை அடுப்பு வடிவில் உருவாக்க வேண்டும்.

சூடு
அதன் பின் ஈர மணலை திடமாக்க அதில் தீ மூட்டி ஈர மணல் அடுப்பை நன்கு வேக வைக்க வேண்டும்.

தெர்மோ-எலக்ட்ரிக் ஜெனரேட்டர்
அடுப்பு முற்றிலும் தயாரான பின் தெர்மோ-எலக்ட்ரிக் ஜெனரேட்டரை அடுப்பில் இணைக்க வேண்டும்.

சமையல்
இனி அடுப்பில் சமைக்கும் போது தெர்மோ-எலக்ட்ரிக் ஜெனரேட்டர் உதவியோடு மின்சாதன கருவிகளை சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் படிக்க
நீங்களும் செய்யலாம் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.!


Click it and Unblock the Notifications