ஊர் முழுவதும் மழை, போனினை பாதுகாப்பது எப்படி..??
தமிழகம் முழுவதும் கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை என ஊரே தண்ணீரில் மூழ்கியிருக்கின்றது என்றே கூற வேண்டும். இந்த மழை மூலம் பல்வேறு பிரச்சனைகளை அனைவரும் சந்தித்து வரும் நிலையில் மக்களின் அத்தியாவசிய கருவியை இக்காலத்தில் எப்படி சாமர்த்தியமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

நீர்
போன் நீரில் நனையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பாருங்கள்.

ப்ளூடூத் ஹெட்போன்கள்
மழை காலங்களில் முடிந்த வரை ஹெட்போன் அல்லது ப்ளூடூத் ஹெட்செட்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது போனிற்கு பாதுகாப்பாக இருக்கும்.

பவுச்
மழை காலங்களில் போனினை வாட்டர் ப்ரூஃப் கவர்களில் எடுத்து செல்லலாம்.

ஈரம்
ஒரு வேலை போன் நீரில் விழுந்து விட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பாருங்கள்.

பேட்டரி
போன் தண்ணீரில் நனைந்து விட்டால் உடனடியாக அதன் பேட்டரி, சிம் கார்டு, மெமரி கார்டு உள்ளிட்டவைகளை முழுவதுமாக கழற்றி போனினை காய வைக்க வேண்டும்.

துடைத்தல்
போன் முழுமையாக காய வைத்த பின் சுத்தமான துணியை கொண்டு கருவியை துடைக்கலாம்.

டிரையர்
ஹேர் டிரையர் கொண்டு போனில் இருக்கும் ஈரத்தை காய வைக்க கூடாது. இவ்வாறு செய்வது போனினை எரித்து விட அதிக வாய்ப்பு இருக்கின்றது.

அரிசி
போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம். இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் முழுமையாக எடுக்கப்பட்டு விடும்.

சார்ஜர்
போன் ஈரமாக இருக்கும் போது அதனினை சார்ஜரில் போடுவது பல பிரச்சனைகளுக்கு வழி செய்யும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications