புதுவகை பிளே ஸ்டேஷன் 4 செப்டம்பரில் வெளியாகலாம்.??
உலகளாவிய பிளே ஸ்டேஷன் பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செய்தி ஒரு வழியாக இணையத்தில் கசிந்திருக்கின்றது. சோனி நிறுவனத்தின் புதிய வகை பிளே ஸ்டேஷன் 4 கருவிகள் வெளியாவது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : டிரோன் போர் ஏற்படும் என்பதை 1898 ஆம் ஆண்டே தெரிவித்த தீர்க்கதரிசி.!!
செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரத்தியேக விழாவில் சோனி நிறுவனம் புது வகை பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கருவிகளை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி சோனி நிறுவனம் இரு வித மாடல்களில் பிளே ஸ்டேஷன் 4 கருவிகளை வெளியிடலாம் என்றும் கூறப்படுகின்றது.

பெயர்
நியோ ‘Neo' என்ற பெயரில் இதுவரை வெளியானவற்றை விட அதிக சக்தி வாய்ந்த கேமிங் கருவியினை வெளியிட இருப்பதாக முன்பு கூறப்பட்டிருந்தது.

சோனி
ஆனால் சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சோனி நிறுவனம் தனது முந்தைய மாடல்களை விட மேம்படுத்தப்பட்ட மாடலினை வெளியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமிங்
இரு வித மாடல்களில் வெளியிடும் போது உலகளாவிய கேமிங் பிரியர்களை கவர முடியும் என்றும் புதிய கேமர்களை ஈர்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை
சோனி நிறுவனம் இதுவரை சுமார் 40 மில்லியன் பிளே ஸ்டேஷன் கன்சோல்களை விற்பனை செய்திருக்கின்றது. சோனி நிறுவனத்தின் மொத்த லாபத்தில் கேமிங் பிரிவு மட்டும் சுமார் 75 சதவீதம் ஆகும்.

வெளியீடு
நின்டென்டோ நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகளவு கேமிங் கருவிகளை வெளியிடுவதோடு ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கான கேம்களையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்திருந்தது.

பயனர்
சோனி வரலாற்றில் மொபைல் போன் இயங்குதளங்களுக்கு கேம்களை தயாரிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிய கேமிங் பரியர்களை கவரும் விதமாக இந்த முயற்சி இருக்கும்.

இதையும் படியுங்கள்
திடீரென்று ஏன் இந்த ஏரி இரத்த சிவப்பாய் உருமாறியது..?!
ஒன்பது லக்கினங்களில் உச்சம் பெற்றவரும் சிக்கும் 'மின்-வலை'.!!


Click it and Unblock the Notifications