புதுமையான செக்யூரிட்டி கேமராவை அறிமுகம் செய்தது ரிங் நிறுவனம்.!
இதுவரை வீட்டிலோ அல்லது அலுவங்கங்களிலோ ஓரிடத்தில் பொருத்தி பயன்படுத்தப்பட்டு வந்தது கண்காணிப்பு கேமராக்கள்,ஆனால் ரிங் நிறுவனம் பறந்து கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராவை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது.

அதாவது ட்ரோன் எனப்படும் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறந்து கண்காணிக்கும் புதிய செக்யூரிட்டி கேமராவை ரிங் நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது யாரும் இல்லாத வீட்டில் இல்லாத நேரத்திலும், கட்டளையிட்டால் ஒவ்வொரு அறையாக பறந்து சென்று கண்காணிப்பை வழங்கும். ஒருவேளை வீட்டில் நீங்கள் ஸ்டவ்வை அணைக்க மறந்துவிட்டமோ,ஜன்னலை திறந்து வைத்து விட்டோமோ, கதவை பூட்டி விட்டோமோ என்பது போன்ற சாதாரண விஷயங்களை சரிபார்ப்பதற்கு கூட இந்த கேமராவை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த ரிங் நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமரா ஆனது எதன் மீதும் இடித்துக் கொள்ளாமல் பறக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இண்டோர் கண்காணிப்பிற்கு பல கேமராக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அதை ஒரு கேமராவின் மூலம் செய்வதே இந்த புதிய கருவியின் நோக்கம் என்று ரிங் நிறுவனத்தின் jamine siminoff தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இந்த பறக்கும் கண்காணப்பு கேமராவின் விலை $ 249.99டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் பேட்டரி நன்மை, எவ்வளவு நேரம் வரை பறக்கும் என்பதை பற்றிய அறிவிப்பை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

மேலும் இந்த இந்த ரிங் நிறுவனத்தின் செக்யூரிட்டி கேமரா ஆனது பறக்கும் நிலையில் சத்தம் எழுப்புமா என்று கேள்வி பலருக்கும் வரும்? கண்டிப்பாக இது பறக்கும் போது சத்தம் எழுப்பும் என்று தகவல் கிடைத்துள்ளது, எனவே ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்ய முடியாது. ஒருவேளை சத்தம் எழுப்பாமல் இந்த சாதனம் பறக்கும் என்றால் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு செக்யூரிட்டி கேமரா ஆனது 1080 பிக்சல் திர்மானத்தை கொண்டுள்ளது, மேலும் வீட்டு பாதுகாப்பு வணிகத்திற்கு பொறுப்பான அமேசானின் கீழ் உள்ள ரிங் பிரிவு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே உங்கள் வீடு முழுவதும் பறக்கும் கேமராவுடன் ஒரு ட்ரோனை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications