இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் அனைத்து நல்ல வரவேற்பை பெறுகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் டிவி,ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக ரியல்மி, ஒப்போ, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் புதிய ஸ்மார்ட் பேண்ட் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அன்மையில் ரெட்மி நிறுவனம் அறிவித்தபடி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. குறிப்பாக சிறந்த வடிவமைப்பு, சிறந்த தொழில்நுட்ப வசதி என பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ஆனது 1.08-இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட டச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 128x220 பிக்சல் திர்மானம் மற்றும் 2டி டெம்பர்டு கிளாஸ் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த ரெட்மி சாதனத்தில் இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைன்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இந்த சாதனத்தில் செயலிகளின், நோட்டிபிகேஷன், செடன்ட்டரி ரிமைண்டர், டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸடண்ட் வசதி இருப்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.
ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 130எம்ஏஎச் பேட்டரி வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் பிளாக், புளூ, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் இந்த அட்டகாசமான சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ஆனது ரூ.1599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி பேக்கப், பில்ட் இன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த சாதனம் ஆன்லைன் தளங்களில் விற்பனைகக்கு வரும் என்றும் பின்பு ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications