ஒரே நாளில் வீடு கட்டும் தொழில்நுட்பம்..!!
டிஜிட்டல் ஃபைல்களில் இருந்து முப்பறிமான பொருட்களை உருவாக்குவதே 3டி ப்ரின்டிங் என அழைக்கப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் மூலம் பல பொருட்களை தொடர்ச்சியாக அடுக்கி வைத்து குறிப்பிட்ட பொருள் 3டி முறையில் உருவாக்கப்படுகின்றது.
மூன்று மணி நேரத்தில் முழுமையான வீடு, அசத்தும் 3டி ப்ரின்டர்..!!
3டி ப்ரின்டிங் தொழில்நுட்பத்தை சார்லஸ் ஹல் என்பவர் 1984 ஆம் ஆண்டு கண்டறிந்தார். ஏபிஎஸ் ப்ளாஸ்டிக், பிஎல்ஏ, போலிமைடு, கிளாஸ் கொண்ட போலிமைடு, சில்வர், டைட்டானியம், ஸ்டீல், மெழுகு போன்ற பொருட்களை கொண்டு 3டி ப்ரின்டிங் செய்ய முடியும்.

வீடு
பல பொருட்களை 3டி ப்ரின்டிங் மூலம் வடிவமைக்கும் முறை மெல்ல கட்டிடங்களை உருவாக்குவது வரை முன்னேறி இருக்கின்றது.

ரஷ்யா
அந்த வகையில் ரஷ்யா பொறியாளரான நிகிட்டா சென்-யுன்-டய் எபிஸ் கார் 3டி ப்ரின்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒரு நாள்
இந்த ப்ரின்டர் சுமார் 24 மணி நேரத்திற்குள் ஒரு முழுமையான வீட்டினை ப்ரின்ட் செய்யும் என கூறப்படுகின்றது.

பெயர்வுத்திறன்
இதன் வடிவமைப்பு மற்றும் பெயர்வுத்திறன் இந்த ப்ரின்டரை எளிமையாக கையாள வழி செய்கின்றது. 16.4*5 அடி இருக்கும் இந்த ப்ரின்டர் எடை 2.5 டன் ஆகும்.

கட்டமைப்பு
பயன்படுத்தும் முன் முப்பது நிமிடங்கள் இருந்தால் இந்த ப்ரின்டரை கட்டமைத்து விடலாம்.

இடம்
இடத்தின் நடு பகுதியில் இந்த கருவியை பொருத்தினால் போதும், ஒரே இடத்தில் இருந்து வீட்டை முழுமையாக கட்டமைத்து விடும்.

மின்சாரம்
8 வாட்ஸ் மின்சாரத்தை மட்டும் பயன்படுத்தும் இந்த ப்ரின்டர் மூலப்பொருட்களை சிறிதளவும் பாழாக்காது.

முதலீடு
சீனா, தென் கொரியா மற்றும் அரபு நாடுகளில் எபிஸ் கார் ஏற்கனவே பல முதலீடுகளை பெற்றுள்ளதாகவும் இந்த அரசுகள் 3டி ப்ரின்டர் தொழில்நுட்பத்தை கொண்டு வீடுகளை கட்டமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதாக எப்ஸி கார் நிறுவனத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோ
எபிஸ் கார் ப்ரின்டர் எப்படி வேலை செய்யும் என்பதை அந்நிறுவனத்தின் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications