இந்தியா வல்லரசு ஆகிடுச்சோ..!?
டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத், என பல புதிய திட்டங்கள்..,
உலக நாடுகளில் சுற்று பயணம் என பரபரப்பாக இந்திய பிரதமர் இயங்கி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை துவங்குவதோடு இந்தியாவில் பல கோடிகளை முதலீடு செய்யவும் ஆர்வம் செலுத்தி வருகின்றன.
நிலைமை இப்படி இருக்க புதிய வகை தொழில்நுட்பத்தின் வரவு இந்தியா உண்மையில் வல்லரசு ஆகிவிட்டதோ என்றே எண்ண தோன்றுகின்றது. அப்படி என்ன தான் நடந்திருக்கு என்பதை ஸ்லைடர்களில் அறிந்து கொள்ளுங்கள்..

ரோபோட்
வேகமாக வளர்ந்து வரும் ரோபோட் சந்தை மெல்ல இந்தியாவிலும் கவனம் செலுத்த துவங்கி விட்டது.

விற்பனை
வீட்டு பணிகளை மேற்கொள்ளும் புதிய வகை ரோபோட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் முறை
இது போன்ற ரோபோட் இந்தியாவில் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுகம்
பிரபல ரோபோட் தயாரிப்பு நிறுவனமான மிலாக்ரோ ஹியுமன்டெக் அகுவாபோட் 4.0 எனும் புதிய வகை ரோபோட்டினை அறிமுகம் செய்திருக்கின்றது.

மாப்
மேம்படுத்தப்பட்ட மாப்பிங் சிஸ்டம் மற்றும் சிறிய நீர்த்தேக்கம் ஒன்றும் கொண்டிருக்கின்றது.

தரை
இந்த ரோபோட் ஈரமான தரையை சுத்தமாக்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்
இந்த ரோபோட் பவர்ஃபுல் சக்ஷன் (சக்திவாய்ந்த இழுக்கும் திறன்), ஆட்டோமேடிக் சக்ஷன் பவர் கண்ட்ரோல், அல்ட்ரா வயலட் ரேடிஷன் க்ளீனிங், ஆட்டோமேடிக் அப்ஸ்டேக்கிள் மற்றும் ஃபால் டிடெக்ஷன், ஹை எஃபிஷியன்ஸி பார்டிகுலேட் ஏர் ஃபில்டர் மற்றும் அனைத்து வித தரையிலும் பயன்படுத்தும் வசதி போன்ற சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரிமோட்
ரிமோட் மூலம் இயக்க கூடிய அகுவாபட் 4.0 சுமார் 120 நிமிடங்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஒரு முறை சார்ஜ் செய்தால் 3000 சதுர அடி வரை சுத்தம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை
இந்தியா வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் புதிய கருவியாக இருக்கும் இந்த வகை ரோபோட் விற்பனை எவ்வாறு இருக்கும் என்று விரைவில் அறிந்து கொள்ள முடியும்.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications