இனி 5ஜிக்கு கூட மலிவு கட்டணம்: ஜிஎஸ்டி குறைப்பு- அதிரவிட்ட அமைச்சர்.!
டெலிகாம் துறையில் தற்போது பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வரப்போரகின்றார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மேலும், பொது மக்களுக்கு டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளை மலிவான கட்டணத்தில் கிடைக்கவும் ஏற்பாட
டெலிகாம் துறையில் தற்போது பல்வேறு மாற்றங்களையும் கொண்டு வரப்போரகின்றார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மேலும், பொது மக்களுக்கு டெலிகாம் நிறுவனங்களின் சேவைகளை மலிவான கட்டணத்தில் கிடைக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இனி வர இருக்கும் 5ஜி தொழில்நுட்பம் கூட மலிவான கட்டணத்தில் பெற முடியும் என்று உறுதியாக கூற முடியும்.
தற்போது, ஜிஎஸ்டி 18% முதல் 12 % வரை டெலிகாம் நிறுவனங்கள் மீது குறைக்க திட்டமிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் குறைக்க நடவடிக்கை:
தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சிக்கலான தொலைத்தொடர்பு துறைக்கான சீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மேலும், குறைந்த உரிமம் கட்டணம் உட்பட பட்ஜெட் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ஜிஎஸ்டி குறைப்படுகின்றது:
டெலிகாம் துறை நிறுவனங்களுக்கு 12% முதல் 18 % வரை குறைப்படுவதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், மொபைல் கட்டணமும் குறைக்க உதவுகின்றது. தற்போது, பட்ஜெட்க்கு வெளியே ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய, மாநில அமைச்சர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

மலிவான கட்டணம்:
டிஜிட்டல் இந்தியாவை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் உந்துதலாக இந்த பரிந்துரைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் வரும் 5ஜி தொழில்நுட்பத்தில் மலிவான மொபைல் சேவைகளுக்கும் வழி வகுக்கின்றது.

டெலிகாம் நிறுவனங்களுக்கும் குறைப்பு:
நிறுவனங்கள் செலுத்தும் உரிமக் கட்டணத்தில் 25 % குறைக்கப்படுவதாக ரவிசங்கர் பிரசாத் முன் மொழிந்துள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. யுனிவர்சல் சர்வீஸ் ஆபிளிகேஷன் பண்ட் (யுஎஸ்ஓஎப்) வரியை 2% குறைப்பதன் மூலம் இதை செய்யலாம். தற்போது, 8% (5% யுஎஸ்ஓஎப் 3% நிர்வாகக் கட்டணங்கள்) இதிலிருந்து 6% ஆக பயனளிக்கும் கட்டண விகிதத்தையும் குறைக்க கூடும்.

ஏர்டெல், வோடபோன் ஐடியா பயன்:
மொபைல் ஆப்ரேட்டர்களுக்கு அரசங்கத்தால் செலுத்த வேண்டிய டெலிகாம் நிறுவனங்களுக்கு தடைபட்டிருந்த ரூ.30,000 கோடியும், ஜிஎஸ்டி உள்ளீட்டு வரவுகளையும் சேர்த்தி செலுத்தம் முயற்சியும் நடக்கின்றது.
உரிமக் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற அனைத்து ஆபரேட்டர்களும் பயனளிக்கும் மேலும், அவரை கடனையும், பெருகி வரும் இழப்புகளையும் எதிர்த்து போராடும் போது பணத்தை விடுவிக்க உதவும்.

விரிவான சேவையளிக்க முடியும்:
இப்போது அடிப்படை தேவையாகும் இருக்கும் மொபைல் கைபேசிகள் 12% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகின்றன.
மொபைல் சேவைகளுக்கு 18 % கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சமூகத்தின் ஏழ்மையான பிரிவுகள் உட்பட 1.2 பில்லியன் சந்தாதார்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்கான தேவை மற்றும் பயன்பாடாக மொபைல் மாறிவிட்டது.
எனவே தொலைத் தொடர்பு சேவைகளில் ஜிஎஸ்டி வீதத்தையும் குறைப்பது என்பது மிக அதிக எண்ணிக்கையிலான தொலைத் தொடர்பு சந்தாரர்களுக்கு பயனளிக்கும்.


Click it and Unblock the Notifications