விரைவில்: இரண்டு புதிய ஆப்பிள் இயர்போன்கள் அறிமுகம்.!
ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்கவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இந்நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ஐபோன்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஏர்பாட்ஸ் வேரியண்ட்களை இந்த ஆண்டின் நான்கவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிநவீன தொழில்நுட்ப வதியுடன் இந்த சாதனங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விரைவில் வரும் புதிய வேரியண்ட் தற்போதைய ஏர்பாட்ஸ் மாடலுக்கு மாற்றாக இருக்கும் என என்றும் இவை புதிய வடிவமைப்புக் கொண்டிருக்கும் என தெரிகிறது.

மேலும் இது குறித்து மிங் சி கியூ வெளியிட்டிருக்கும் தகவல்களில் மேம்படுத்தப்பட்ட மாடலின் விலை இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் போன்று நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் ஒன்றும் வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும் புதிய ஏர்பாட்ஸ் அம்சங்கள் பற்றி இதுவரை எந்தவித தகவலும் வெளிவரவில்லை.
இதுவரை வெளிவந்த தகவலின் அடிப்படையில் மேம்பட்ட ஏர்பாட்ஸ் மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் சார்ந்து மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. பின்பு 2019-ம் ஆண்டு ஆப்பிள் ஏர்பாட்ஸ் விநியோகம்5.2 கோடிகளை கடக்கும் என தெரிகிறது.

இது 2020-ம் ஆண்டில் 7.5 கோடியை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனம் பவர்பீட்ஸ் ப்ரோ எனும் புதிய வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இது 9மணி நேரத்திற்கான பேக்கப், ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் செக்யூர்-ஃபிட் இயர்ஹூக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பவர்பீட்ஸ் ப்ரோ ஐவரி, பிளாக், மாஸ் மற்றும் நேவி உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை ரூ.17,260-ஆக உள்ளது. இதன் விற்பனை அமெரிக்கா மற்றும் 20நாடுகளில் விரைவில் துவங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications