அட்டகாசமான டிசைனில் 5ஜி சேவையுடன் போல்டபில் ஐபேட் விரைவில் அறிமுகம்!
ஆப்பிள் நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஐபேட் மாடலை 5ஜி சேவையுடன் உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கான பணியில் ஆப்பிள் நிறுவனம் மும்முரமாக களமிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெஃப்லின் கொடுத்த தகவல்
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் இந்த சாதனம் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனைச் சேர்ந்த ஆய்வாளரான ஜெஃப்லின் இந்த தகவல் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார்.

13' அல்லது 15' இன்ச் போல்டபில் டிஸ்பிளே
புதிய சாதனத்தில் மேக்புக் அளவிலான ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என சர்வதேச அளவில் தகவல் வழங்கும் ஐ.ஹெச்.எஸ். மார்கிட் நிறுவனத்தில் ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார். புதிய ஐபேட் சாதனம் 13 அல்லது 15 இன்ச் அளவில் மடக்கக் கூடிய வசதியுடன் அறிமுகம் செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

5ஜி சேவையில் கால் பாதிக்கும் ஆப்பிள் நிறுவனம்
புதிய ஐபேட் மாடலில் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை ஆப்பிளின் எந்த சாதனத்திலும் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டில் இந்த மடக்கக் கூடிய ஐபேட் அறிமுகம் செய்யப்படும்.

மூன்று புதிய ஐபோன் மாடல்கள்
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன் மாடல்களை உலக சந்தையில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் உட்பட பெரும்பாலான முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி மீதான சோதனையைத் துவங்கிவிட்டது.

சோதனையைத் துவங்கியது ஆப்பிள்
புதிய ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களும் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறித்து. அதேபோல் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சேவைக்கான சோதனையைத் துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications