Just In
- 6 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 6 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 7 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 9 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சைபர் போர் : தயாராகும் தென் கொரியா.!!
உலகெங்கும் ஹேக்கிங் மற்றும் சைபர் தாக்குதல் மூலம் இழப்புகள் மற்றும் தகவல் திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. இந்நிலையில் அடிதடி இல்லாமல், உயிர் இழப்புகள் இல்லாமல் இண்டர்நெட் கொண்டு இரு நாடுகள் மோதிக்கொள்ள தயாராகி விட்டன.
அதன் படி தென் கொரியா தனக்கென சொந்தமாக சைபர் ராணுவம் ஒன்றை உருவாக்கி வருகின்றது. தனது எதிரி நாடான வட கொரியாவின் சைபர் சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென் கொரியா சைபர் ராணுவத்தை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கென தென் கொரியா தலைநகரமான சியோல் பகுதியில் அமைந்திருக்கும் பாரம்பரிய கொரிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ரகசியமாக பயிற்சி அளிக்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்து வகுப்புகளில் ஈடுபடும் மாணவர்கள் நம்பர் மூலம் அடையாளம் காணப்படுவதோடு அவர்களின் சார்ந்த தகவல்கள் வெளியுலகம் அறிந்திராத படி ரகசியமாக வைக்கப்படுகின்றது. இந்த வகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அந்நாட்டின் சைபர் டிஃபென்ஸ் பாடத்திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படுகின்றது. 21-வயதான மாணவர் நோஹ் தனது தந்தையின் வழிகாட்டுதலின் படி இந்த பாடத்திட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் சிறு வயது முதல் தனக்கு சைபர் செக்யூரிட்டி மற்றும் கணினி சார்ந்த துறையில் ஆர்வம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். 'இது வெறும் பாடத்திட்டமாக மட்டுமில்லாமல் இதில் எனது வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள ஒரு திட்டமாகவும் இருக்கின்றது' என நோஹ் தெரிவித்தார். சைபர் போராளி என்ற பணியில் என்னையே நாட்டிற்காக அறப்ணித்து கொள்வது பெருமையாக இருப்பதாகவும் நோஹ் தெரிவித்தார். தென் கொரியாவின் சைபர் டிஃபென்ஸ் திட்டம் 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, அதில் இளம் பிரோகிராம்மர்கள் உதவித்தொகை மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றனர். தென் கொரிய இளைஞர்கள் அனைவரும் அந்நாட்டு ராணுவத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாயம் பணியாற்ற வேண்டும். பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம் won 500,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ..29,098.97 ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவதாக கொரிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியோங் இக்ரோ தெரிவித்தார். இத்திட்டத்தில் தற்சமயம் சுமார் 30 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் மூன்று நாள் நேர்முக தேர்வில் கலந்து கொள்வர். நேர்முக தேர்வில் மாணவர்களை ராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் கேள்வி கேட்பதோடு மாணவர்களின் உடல் திறன் சோதனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வட கொரியாவில் அர்பணிக்கப்பட்ட சைபர் போராளிகள் இயங்கி வருவதோடு இவர்கள் இம்மாத துவக்கத்தில் தென் கொரியாவின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சைபர் தாக்குதல் புரிந்ததாகவும், அதனினை தென் கொரியா முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.01
02
03
04
05
06
07
08
09
10
11
12
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470