ஐபேட் போட்டியாளரை களமிறக்கும் சாம்சங்!

By Karthikeyan
|
ஐபேட் போட்டியாளரை களமிறக்கும் சாம்சங்!

ஆப்பிள் நிறுவனத்தோடு சரிக்குச் சமமாக போட்டி போட்டு வரும் கொரிய நிறுவனமான சாம்சங் வரும் ஆகஸ்ட் 29ல் தனது புதிய கேலக்ஸி நோட்டைக் களமிறக்க இருக்கிறது.

ஆப்பிளின் புதிய ஐபோன் களமிறங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாகவே இந்த புதிய கேலக்ஸி நோட்டைக் களமிறக்குகிறது. ஆகஸ்ட் 29ல் ஜெர்மனியின் பெர்லினில் நடக்கும் ஐரோப்பாவின் மிகப் பெரிய மின்னனு கண்காட்சியில் இந்த அறிவிப்பை வெளியிட சாம்சங் தயாராக இருக்கிறது.

இந்த புதிய கேலக்ஸி நோட் 5.5 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வரும். இதன் ப்ராசஸர் மிக வேகமாக இயங்கும். இதன் கேமரா மிகத் துல்லியமாக இருக்கும். கடந்த வருடம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கும் சாம்சங்கிற்கு இந்த புதிய கேலக்ஸி நோட் மகுடமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

எனவே ஆப்பிள் மற்றும் சாம்சங் இடையிலான இன்னொரு பனிப் போரை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X