சாம்சங்கின் கேலக்ஸி கிராண்ட்: குறைந்த விலை பாப்லெட்

By Super
|
சாம்சங்கின் கேலக்ஸி கிராண்ட்: குறைந்த விலை பாப்லெட்


பல வதந்திகளை முடிவுக்குக் கொண்டுவந்தது சாம்சங்! அதாவது சாம்சங் தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி கிராண்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த கேலக்ஸி கிராண்ட் குறைந்த விலைகொண்ட ஆன்ட்ராய்டு பாப்லெட்டாக இருக்கும்.

இதிலும் கேலக்ஸி S IIIயைப் போன்றே அகலமான 5 அங்குலத்திரை உள்ளது. அதாவது 800 x 480 ரெசுலூசன் கொண்ட திரை. இதில் 1.2 GHz திறனுள்ள ப்ராசசெர் உள்ளது.

சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் உள்ள பல சிறப்பம்சம்கள் இதிலும் உள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவுள்ள ப்ரன்ட் கேமரா கொண்டது.

இந்த புதிய சாதனம் ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படுகிறது. மேலும் இதிலுள்ள சிறப்பம்சம்களாவன,

  • ஒரேநேரத்தில் இருவேறு அப்ளிகேசன்களை உபயோகிக்க முடியும்.

  • S-வாய்ஸ் என்ற அமைப்பு.

  • வீடியோ பாப்பப் மூலமாக வீடியோவை சிறிய அளவில் வேறொரு திரையில் பார்க்கலாம்.

இன்னும் இதன் விலை மற்றும் வெளிவரும் நாட்கள் மட்டும் சாம்சங் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X