அக்டோபரில் புதிய 3ஜி டேப்லெட்டைக் களமிறக்கும் பன்டெல்

By Karthikeyan
|
அக்டோபரில் புதிய 3ஜி டேப்லெட்டைக் களமிறக்கும் பன்டெல்

ஐடி ஹார்ட்வேர் நிறுவனமான பன்டெல் டெக்னாலஜிஸ் வரும் அக்டோபரில் ஒரு புதிய 3ஜி டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. இதை பன்டெல் நிறுவனத்தில் தலைமை மேலாளர் விஜயேந்தர் சிங் உறுதி செய்திருக்கிறார்.

இந்த டேப்லெட் 9.7 இன்ச் அளவில் வர இருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் டூவல் கோர் ப்ராசஸருடன் களமிறங்க இருக்கிறது. ஆனால் இதன் விலை பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. குறிப்பாக கல்வியில் டேப்லெட்டின் தேவையை மனதில் கொண்டு இந்த புதிய டேப்லெட்டை பன்டல் களமிறக்க இருக்கிறது.

மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சேவைகளை வழங்க இந்த நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்தோடும் ஒப்பந்தம் ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் டேப்லெட்டைத் தயாரிக்க பெங்களூரில் அதற்கான வசதிகளை பன்டெல் நிறுவனம் வைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் 1.5 லட்சம் டேப்லெட்டுகளைத் தயாரிக்கும் திறனையும் இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X