பானாசோனிக் டஃப்புக் புதிய அறிமுகம்!

இந்த டஃப்புக் 12.5 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரையில் சிறப்பாக 5 விரல்களை கொண்டும் தொடுதிரையை பயன்படுத்தலாம். இதன் மல்டி டச் திரை, தொட்டவுடன் தகவல்களை விரைவாக வழங்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சிஎஃப்-சி-2 டஃப்புக் இன்டெல் கோர் ஐ-5 விப்ரோ பிராசஸரினையும் கொண்டிருக்கும். இதன் பிராசஸர் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இதில் 4ஜிபி ரேம் வசதியை அளிக்கும். இதில் 8 ஜிபி வரை ரேம் வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டஃப்புக்கில் வின்டோஸ்-8 ப்ரீ-லோட் செய்யப்பட்டுள்ளது.
இதில் 9-செல் , 6-செல் மற்றும் 3-செல் பேட்டரிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் 9-செல் பேட்டரி 15 மணி நேரத்தினையும், 3-செல் பேட்டரி 5 மணி நேரத்தினையும், 6-செல் பேட்டரி 11 மணி நேரம்
பேட்டரியினையும் வழங்கும்.
அதோடு இதில் என்எப்சி தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தகவல்கள் கூறுகின்றது. ஆனால் இந்த டஃப்புக்கின் விலை கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் போல் தெரிகிறது.
இந்த டஃப்புக் கிட்டத்தட்ட 1 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என்று வலைத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவு இதன் சிறப்பு
என்ன என்பதையும் பொருத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications