ஹைபிரிட் லேப்டாப்பை அறிமுகப்படுத்தும் எச்டிசி!

By Super
|

ஹைபிரிட் லேப்டாப்பை அறிமுகப்படுத்தும் எச்டிசி!
டேப்லெட் மற்றும் லேப்டாப் ஆகிய இரண்டையும் சேர்த்து செய்த கலவை போல் புதிய ஹைபிரிட் ரகத்தை சேர்ந்த லேப்டாப்பை(குரோம்புக்)அறிமுகப்படுத்த எச்டிசி நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தால் முதன்முதலாக குரோம்புக் அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் மற்றும் ஏசர் அகியவை அறி முகப்படுத்திய குரோம்புக்குகள் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பையும் பெற்றன.

இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நிறுவனங்களும் 25000 முதல் 30000 குரோம்புக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கின்றன. இந்த நிலையில் எச்டிசி நிறுவனமும் தனது புதிய ஹைபிரிட் ரகத்தை சேர்ந்த குரோம்புக்கை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்டிசியின் டேப்லெட்டுகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால், குரோம்புக்கை முதன்முதலில் இப்போதுதான் எச்டிசி அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நோட்புக், ஏசரின் டேப்லெட் போல இருக்கும் என்று டிஜிடைம்ஸ் கூறியுள்ளது. இந்த நோட்புக் அடிப்படையில் ஒரு வெப் பேஸ்டு லேப்டாப் ஆகும். மேலும் இது கூகுள் குரோம் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும். இது ஸ்லைடர் கீபோர்டை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

ஸ்மார்ட்போன் உலகில் எச்டிசி நிறுவனம் முன்னனியில் இருக்கிறது. மேலும் அவர்களின் டேப்லட்டுகளும் மிக அபாரமாக உள்ளன. ஆனால் எச்டிசி நோட்புக்கை தரமான வகையில் தந்துவிடுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

இந்த புதிய டிவைஸ் டூவல் பூட் செட்டப்புடன், 2 இயங்கு தளங்களைக் கொண்டிருக்கும். கடந்த 2008ல் டூவல் பூட் இயங்குதளத்தைக் கொண்ட டிவஸை எச்டிசி அறிமுகப்படுத்தியது. அந்த டிவைசின் பெயர் எச்டிசி சிப்ட் ஆகும். மேலும் அது ஒரு அல்ட்ரா போர்ட்டபுள் பிசி ஆகும். ஆனால் அந்த டிவைஸ் அவர்களுக்கு வெற்றியைத் தரவில்லை.

மின்னணு சாதன உலகம் குரோம் மற்றும் ஆன்ட்ராய்டிற்கு இடையேயான உயர்தர இயங்குதளத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு சிஸ்டத்தை அன்றாட வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கிறது. அதே நேரத்தில் குரோம் இயங்கு தளம் கடினமான பணிகளை செய்வதற்கு உதவியாக இருக்கிறது.

வரவிருக்கும் புதிய ஹைபிரிட் லேப்டாப் இந்த இரண்டு இயங்குதளங்களையும் கொண்டிருக்கும். அதனால் இந்த புதிய ஹைபிரிட் லேப்டா்ப மிக அபாரமாக செயல்படும் என்று கணிக்கப்படுகிறது.

அடுத்ததாக இந்த க்ரோம்புக் மிக உயர்தரமான ஏஆர்எம் பிராசஸரைக் கொண்டிருக்கும். குரோம் இயங்குதளத்தின் அப்ளிகேசன்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும். அதனால் இந்த டிவைசில் எவ்வளவு பைல்களை நாம் சேமித்து வைத்தாலும் இதன் வேகம் குறையாமல் இருக்கும். மேலும் இந்த லேப்டாப்பின் வேகமும் அதிவேகம் கொண்டதாக இருக்கும். ஆனால் இன்டர்னட் வசதி இல்லாமல் இந்த க்ரோம்புக்கை வாங்கினால் எந்தவித பலனும் இருக்காது. மேலும் இந்த குரோம்புக்கின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X