ஏராளமான வசதிகளுடன் புதிய எப்சன் பிரிண்டர்

அலுவலக பயன்பாட்டில் பிரிண்டர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதோடு பன்முகத் தன்மை கொண்ட பிரிடண்டர்கள் ஒரு ஸ்கேனர் செய்யக்கூடிய வேலைகளையும் செய்கின்றன. அந்த வகையில் பிரிண்டர்களைத் தயாரிக்கும் நிறுவனமான எப்சன் ஒரு புதிய பிரிண்டரைக் களமிறக்குகிறது. இந்த பிரிண்டருக்கு எப்சன் எம்இ ஆபிஸ் 535 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த பிரிண்டர் பல வேலைகளைச் செய்யும் திறன் கொண்டது.
சூப்பாரன ஸ்டைலுடன் வரும் இந்த பிரண்டர் மிகவும் தரமாக இருக்கிறது. இதன் மேல் பகுதியில் பிரண்ட் செய்வதற்காக தாளை நுழைக்கும் பகுதி உள்ளது. இந்த பகுதி தூசுகளால் பாதிப்பு அடையாது. பிரிண்ட் செய்யாத போது இந்த பகுதியை மூடிக்கொள்ளலாம். இந்த பிரிண்டரின் பின்பகுதி யுஎஸ்பி மற்றும் பவர் ஜாக் உள்ளது.
இந்த பிரிண்டர்களின் பட்டன்கள் பெரியதாக உள்ளதால் இதை இயக்குவது மிக எளிதாக இருக்கும். மேலும் இதில் இருக்கும் 1.4 இன்ட் டிஎப்பி வண்ண டிஸ்ப்ளே பிரண்ட் எடுக்கும் போது சூப்பராக உதவி செய்யும்.
இந்த எப்சன் எம்இ ஆபிஸ் 535 ஒரு பன்முக செயல்பாடு கொண்ட பிரிண்டர் ஆகும். இந்த பிரிண்டர் மூலம் பிரிண்ட் செய்யலாம். ஸ்கேன் செய்யலாம். நகல் எடுக்கலாம். மற்றும் போட்டோ எடுக்கலாம். இது 4 பிஎல் ட்ரோப்லட் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இதன் பிரிண்ட் மிகத் தெளிவாக இருக்கும். இதில் இருக்கும் ஸ்கேனரும் மிக சூப்பரான ஸ்கேனை வழங்கும்.
இந்த பிரிண்டரில் ஒரே நேரத்தில் 100 எ4 சைஸ் தாள்களை அல்லது 20 போட்டோ தாள்களை வைக்க முடியும். இந்த பிரிண்டரில் வைபை வசதி இல்லை. அதுபோல் இதில் டுப்லெக்ஸ் வசதியும் இல்லை. ஆனால் கணினி இல்லாமலேயே யுஎஸ்பி வசதி மூலம் இந்த பிரிண்டரில் போட்டோக்களை பிரிண்ட் எடுக்க முடியும்.
இந்த பிரிண்டரின் விலை ரூ.5999 ஆகும்.


Click it and Unblock the Notifications