Just In
- 1 hr ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 1 hr ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 2 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 3 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வங்கதேசத்தில் உலகின் குறைந்த விலை லேப்டாப்புகள் அறிமுகம்
வங்கதேச அரசின் தொலைதொடர்பு நிறுவனமான டிஎஸ்எஸ் இந்த மலிவு விலை லேப்டாப்புகளை தயாரித்துள்ளது. இந்த புதிய லேப்டாப்புகள் 4 மாடல்களில் வருகிறது. அதாவது ப்ரைமரி, பேசிக், ஸ்டேன்டர்ட் மற்றும் அட்வான்ஸ்டு என்று 4 மாடல்களில் வருகிறது.
டோயல் என்று பெயரில் வரும் இந்த லேப்டாப்புகள் வங்கதேசத்தின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் தகவல் தொடர்புக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். இதன் எல்டிடி திரை 10 இன்ச் அளவு கொண்டதாகும். இது 800எம்ஹெர்ட்ஸ் கொண்ட விஐஎ 8650 ப்ராசஸர் கொண்டிருக்கிறது.
இதன் ரேம் 512எம்பி ஆகும். மேலும் இது 0.3 மெகா பிக்சல் கொண்ட வெப்காமைக் கொண்டிருக்கிறது. அதுபோல் 2.0 யுஎஸ்பி போர்ட்டும் இதில் உண்டு. அதிக இணையதள இணைப்பு இல்லாத நாடான பங்களாதேஷ் தனது வளர்ச்சிக்காக இணையதள இணைப்பை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்த புதிய லேப்டாப் மூலமாக இணையதளத்தில் அந்த நாடு தன்னிறைவு அடைந்துவிடும் என நம்பலாம்.
டோயல் பேசிக், ஸ்டேண்டர்ட் மற்றும் அட்வானஸ்ட் லேப்டாப்புகள் இன்டல் ப்ராசஸர் கொண்டு லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. டோயல் பேசிக் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயும், டோயல் ஸ்டேண்டர்ட் 12.2 இன்ச் டிஸ்ப்ளேயும் மற்றும் அட்வான்ஸ்ட் 14 இன்ச் டிஸ்ப்ளேயும் கொண்டிருக்கின்றன. இவற்றின் டிஸ்ப்ளே ரிசலூசன் 1366*768 பிக்சல் ஆகும்.
பேசிக் மற்றும் ஸ்டேண்டர்ட் மற்றும் அட்வானஸ்ட் லேப்டாப்புகள் 2ஜிபி ரேமையும 1.3 மெகா பிக்சல் கேமராவையும் கொண்டிருக்கின்றன. இந்த 4 பிரிவு லேப்டாப்புகளும் 802.11பி/ஜி/என் பெற்றிருக்கின்றன. முதலில் இந்த லேப்டாப்புகள் அரசு அலவலகங்களில் வழங்கப்படும். பின் நாட்டிலுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும். இப்போது 10% லேப்டாப்புகளே அரசு தயாரித்திருக்கிறது. இன்னும் 6 மாதங்களில் 60% லேப்டாப்புகள் தயாரிக்கப்பட்டுவிடும்.
விலையைப் பார்த்தால் டோயல் பிரைமரி ரூ.6,650க்கும், பேசிக் மாடல் ரூ.8,800க்கு கிடைக்கும் என தெரிகிறது. டோயல் ஸ்டேண்டர்ட் ரூ.14,400க்கும் அட்வான்ஸ்டு ரூ.17,000க்கும் கிடைக்கும். இந்த லேப்டாப் பங்களாதேஷ் அரசின் டிஜிட்டல் பங்களாதேஷ் என்ற திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் 2021க்குள் நாடு முழுவதும் இணையதள இணைப்பை வழங்குவதாகும்.
அதற்காக இதன் ஒரு பகுதியாக நாட்டின் தொலைத் தொடர்புத் துறையும் மிக விரைவாக நவீனப்படுத்தப்படுகிறது. இணையதள வசதி இல்லாமல் இந்த லேப்டாப் வெற்றியடைய முடியாது என்று பலர் விமர்சித்தாலும் லேப்டாப்பை வாங்க முடியாத வங்கதேசத்தை சேர்ந்த பெரும்பாலான ஏழை மக்கள் இந்த மலிவு விலை லேப்டாப்பை வாங்கி பயனடைவர் என்று அரசு நம்புகிறது. இந்த லேப்டாப் வெற்றி பெற்றால் பங்களாதேஷ் அரசின் கனவு நனவாகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470