உலக பிரபல அரசியல் தலைவர்களில் ஒருவரும் அமெரிக்க அதிபருமான ஒபாமா வெள்ளை மாளிகையில் புதிய திட்டம் ஒன்றிற்க்கு நேற்று கையெழுத்திட்டுருக்கின்றார். அதுக்கு இப்போ என்ன என்கின்றீர்களா, ஒபாமாவின் இந்த கையெழுத்து உலக நாடுகளை வெகு விரைவில் திரும்பி பார்க்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகை திரும்பி பார்க்க வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் அமெரிக்காவின் புதிய திட்டம் என்ன என்பதை தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம். ஒபாமா புதுசா என்ன திட்டத்தை செயல்படுத்த இருக்கின்றார் என்பதை நீங்களே பாருங்க..
கணினி
அமெரிக்காவில் இன்று வரை உலகின் அதிவேக கணினி கிடையாது.
திட்டம்
இதை கருத்தில் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நேஷனல் ஸ்ட்ராடஜிக் கம்ப்யூட்டிங் இனிஷியேட்டிவ் எனும் புதிய திட்டத்திற்கு கையெழுத்திட்டார்.
அறிக்கை
இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின் முக்கிய குறிப்புகளை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.
நொடி
ஒரு நொடியில் 1018 வேலைகளை செய்யும் திறன் கொண்ட கணினிகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
அதிவேகம்
இதன் மூலம் தற்சமயம் பயன்படுத்த்படும் கணினிகளை விட 30 மடங்கு வேகமான கணினிகளை உருவாக்க முடியும்.
மூளை
மனித மூளையை உருவகப்படுத்தும் சக்தியை எக்ஸாஃப்ளாப் வழங்கும் என்று நியோரோ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சக்தி
இந்தளவு சக்தி வாய்ந்த கணினியை உருவாக்க முடியுமா என்பதே தற்சமயம் வரை கேள்வி குறியாகவே இருக்கிறது.
ஐரோப்பா
தற்சமயம் ஐரோப்பாவில் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களை விட இவை திறன் கொண்டிருக்கும்.
டைன் 2
உலகின் சக்தி வாய்ந்த கணினியான சீனாவின் டைன் 2 கம்ப்யூட்டரை விட இந்த கணினி வேகமாக இருக்கும்.
அமெரிக்கா
திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டால் அமெரிக்கா உலகின் அதிவேக கம்ப்யூட்டரை கொண்ட ஒரே நாடு என்ற பெருமையை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.