பொள்ளாச்சிக்கு ஜிவி பிரகாஷ் செய்த நல்ல காரியம்: குவியும் பாராட்டு.!
இந்நிலையில் அண்மையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பெண்களை பேஸ்புக் மூலம் பழகி பண்னை வீட்டிற்கு அழைந்து வந்து, பாலியல் பலாத்காரம் செய்தனர். இது நாட்டையே உலுக்கியது. மேலும், பொள்ளாச்சியில் குற்றங்
பொள்ளாச்சியில் பெரும்பாலும் பெண்களுக் எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றது. இதில், மேலும், கொலை, கொள்ளை கற்கழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களும் அரங்கேறி வருகின்றது.
பாலியல் குற்றங்களில் பள்ளி சிறுமிகள் உள்ளிட்ட பலரும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பெண்களை பேஸ்புக் மூலம் பழகி பண்னை வீட்டிற்கு அழைந்து வந்து, பாலியல் பலாத்காரம் செய்தனர். இது நாட்டையே உலுக்கியது.
மேலும், பொள்ளாச்சியில் குற்றங் சம்பவங்களை தடுக்கும் விதமாக 50 சிசிடிவி கேமராக்கள் நடிகர் ஜிபி பிரகாஷ் படக்குழு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் காப்பக சிறுமிகள் சீரழிப்பு:
பொள்ளாச்சி பழைய பேருந்து நிறுத்தத்தின் பின்புறத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் உள்ள இரண்டு சிறுமிகளை நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சிறுமிகள் இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குற்றங் சம்பவங்கள்:
இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்தல், கொலை, வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றது.
இதனால் பொது மக்கள் இரவு நேரங்களிலும் செல்ல அச்சப்படுகின்றனர். குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக பொள்ளாச்சி பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நாட்டை அதிரவிட்ட பாலியல் குற்றம்:
பொள்ளாச்சியில் , திருநாவுக்கரசு, சபரி, விவேக் உள்ளிட்ட 5 பேர் உடடினயாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் பெண்களை பேஸ்புக் மூலம் மயக்கி சுமார் 400 பெண்களை பாலியல் வீடியோ எடுத்து மிரட்டி தங்க செயின், பணம் உள்ளிட்டவைகளை வாங்கியுள்ளனர்.

மீண்டும் ஒரு பெண் உடல் வீச்சு:
கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் திண்டுக்கலை சேர்ந்த பிரகதி என்ற இளம்பெண்ணை கல்லூரியின் வெளியே கடத்தி பாலியல் பாலத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, பொள்ளாச்சி பூசாரிபட்டி சாலையோரத்தில் உடலை வீசப்பட்டு குற்றவாளி தப்பி விட்டார்.
இந்த வழக்கில் பெண்ணின் அதே ஊரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பொள்ளாச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், தடுக்க வேண்டும் என்றும், போதிய அளவு சிசிடிவி கேமராக்களை பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜிபி பிரகாஷ் படகுழுவின் 50 சிசிடிவி கேமரா:
பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவி செய்யும் வகையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படக்குழு சார்பில், 50 சிசிடிவி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

ஜி.வி பிரகாஷ் நம்பிக்கை:
இந்நிலையில் இப்படக்குழு சார்பில் பொள்ளாச்சிக்கு 50 சிசிடிவி கேமராக்கள் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. பொள்ளாச்சி நகரின் முக்கிய இடங்களில் இந்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த உதவிகரமாக இருக்கும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications