கியூஆர் கோடை வைத்து ரூ.100, 500, 2000 நோட்டை ஏடிஎம்மில் எடுக்கலாம்.!
வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரூ.100, 500, 2000 நோட்டுகள் தேர்வு செய்து கியூஆர் கோடு உருவாக்கிய பின் ஏடிஎம்ம்மில் பணம் எடுக்கும் வசதி இந்தியா முழுவதும் அறிமுகமாகியுள்ளது.
வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரூ.100, 500, 2000 நோட்டுகள் தேர்வு செய்து கியூஆர் கோடு உருவாக்கிய பின் ஏடிஎம்ம்மில் பணம் எடுக்கும் வசதி இந்தியா முழுவதும் அறிமுகமாகியுள்ளது.

டிஜிட்டல் இந்தியாவில் பணம் பரிவரத்தனையில் இது போன்ற நடவடிக்கையில் மத்திய அரசு இயங்கியுள்ளது சற்று வித்தியாசமாக இருக்கின்றது.

ஏடிஎம்மில் கியூஆர்கோடு :
நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற்றப்படுகின்றது. ஏடிஎம்எமில் மட்டும் கார்டு மூலம் பணம் எடுக்கும் வசதி மட்டும் அப்படியே இருந்து வருகிறது. தற்போது டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படவுள்ளது.
கியூஆர் கோடு மூலம் ஏடிஎம்எமில் பணம் எடுக்கும் வசதியும் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

பண மதிப்பு நடவடிக்கை:
கடந்த 2016ம் ஆண்டில் பண மதிப்பிழப்பை மத்திய அரசு செய்தது. இதனால் புதிய ரூ. 2,000, 500, 200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.
இதையடுத்து புதிய 10 மற்றும் 50 ரூபாய் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஊதா நிறத்திலும் புதிய ரூ.100 நோட்டை ரிசர்வ் வங்கி புழகத்தில் வெளியிட்டுள்ளது.

கியூ ஆர்கோடு :
பெரும்பாலானோர் கியூஆர் கோடு மூலம் மொபைல் பில், ரீசார்ஜ், ஷாப்பிங் பில் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு இந்த கியூ ஆர் கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியூஆர்கோடு மூலம் பணம் எடுக்க:
கியூஆர்கோடு உருவாக்கி பணம் எடுக்க வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம் மையத்திற்கு சென்று வைக்கப்பட்டிருக்கும் கியூ ஆர் கோட்டில் ஸ்கேன்னர் மூலம் பணம் எடுக்கலாம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் அப்ளிகேஷன் மூலம் தாங்கள் விரும்பும் ரூ. 100,500, 2000 நோட்டுக்களை எடுக்கலாம்.

நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை:
இந்த கிஆர் கோடு வந்தால், கிராமம் மற்றும் நகர் புறங்களில் உள்ள சாதாரண நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு தெரியாது. அவர்கள் ஏடிஎம்எம் மூலம் பணம் பெற்றுக் கொள்வார்கள். இதன் காரணமாக இந்த கியூஆர் கோடு மூலம் பணம் எடுப்பதால், ஏடிஎம் மையத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படாது.


Click it and Unblock the Notifications