சத்தம் போடாதே.. WhatsApp க்ரூப்களுக்கு வரும் புதிய அம்சம்.. என்னது அது?
வாட்ஸ்அப் செயலியை நாடு முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றர். குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேபோல் இந்நிறுவனம் வெளியிடும் புதிய அப்டேட்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

க்ரூப் மியூட்
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக ஒரு அப்டேட் வரவுள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயிலியில் க்ரூப் மியூட் எனம் ஆப்ஷன் தான் விரைவில் வெளிவர உள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் பீட்டா தகவல் எனும் இணையத்தில் தான் இந்த புதிய அப்டேட் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்
தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.24.15 ஆண்ட்ராய்டு தளத்தில் க்ரூப் ஆட்டோ மியூட் அப்ஷன் சோதிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டிபிகேஷன்கள்
அதாவது வாட்ஸ்அப் குரூப்பில் இப்போது அதிக (1024) உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. இதனால் வாட்ஸ்அப் குரூப் சாட்டில் நடைபெறும் உரையாடல்கள், அரட்டைகள் நோட்டிபிகேஷன்கள் போன்றவை கண்டிப்பாகப் பயனர்களுக்கு எரிச்சலூட்டும் என்றே கூறலாம்.

Unmute செய்து கொள்ளலாம்
எனவே இதை சரிசெய்யும் வகையில், 256 பேருக்கும் அதிகமான உறுப்பினர்கள் குரூப்பில் வந்தால், அந்த குரூப்பில் இருந்து வரும் நோட்டிபிகேஷன் சவுண்ட் தானாகவே அனைக்கப்படும். பின்பு பயனர்கள் விரும்பினால், அதை Unmute செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

சத்தம் போடாதே
இந்த புதிய அப்டேட் அதிகப்படியான க்ரூப் உறுப்பினர்களுடன் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
தற்போது ஆன்லைனில் இதுகுறித்து ஸ்கிரீன்ஷாட் கூட வெளியாகியுள்ளது. குறிப்பாக குரூப்பில் 256 பேருக்கு மேல் ஒருவர் இணைந்தால் கூட, தானாகவே மியூட் செய்யப்படும். பின்பு பயனர்கள் விரும்பினால் எந்த நேரத்தில் குரூப் சாட் நோட்டிபிகேஷன்களை அன்-மியூட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வாட்ஸ்அப் குரூப்பில் எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்துகொண்டிருந்தாலும், சத்தம் போடாதே என்று
கூறி மியூட் செய்துவிடும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் ஒரு அப்டேட் கூட கொண்டுவர உள்ளது. அதாவது பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் செயலியில் புதிதாக வெளியாகவுள்ள அப்டேட் மூலம் தங்களுக்கு தாங்களே மெசேஜ் அனுப்பவும், முக்கியத் தகவல்களைச் சேமிக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ME என்று இருக்கும்
இந்த வசதியில் வாட்ஸ்அப் உள்ளே பயனர்களின் பெயருக்குப் பதிலாக இனி ME என்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உங்களுக்குத் தேவையான அனைத்து முக்கியத் தகவல்களையும் சேமிக்கமுடியும். எனவே இந்த புதிய வசதியின் மூலம் முக்கியமான தகவல்களைச் சேமிக்க வேறு ஒரு ஆப் வசதியைத் தேட வேண்டியது இல்லை.

Draft மெசேஜ்
இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், வாட்ஸ்அப் கொண்டுவரும் இந்த புதிய அம்சம் ஒரு Draft மெசேஜ் நாம் சேமிப்பதுபோல ஆகும். குறிப்பாக இந்த புதிய அப்டேட் மூலம் வாட்ஸ்அப் நிறுவனம் டெலிகிராம் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவு சவால் தரமுடியும்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications