இனிமேல் 'இந்த' ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் கிடைக்காது எனத் தகவல்? காரணம் என்ன?
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது. அதேபோல் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம். இந்நிலையில் வாட்ஸ்அப் ஆதரவை சில ஐபோன் மாடல்களுக்கு நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெளிவந்த வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ (WABetaInfo) தகவல்களின் படி, சில ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு அளித்து வரும் வாட்ஸ்அப் சேவையை நிறுத்த உள்ளதாக மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், பின்பு அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐஒஎஸ் 11 (ios 11) இயங்குதளம் மற்றும் அதற்கு கீழுள்ள மேம்படுத்தப்படாத இயங்குதளங்களை கொண்டு இயங்கும் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் வரும் அக்டோபர் 24-ம் தேதி இதன் காலக்கொடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 24-ம் தேதிக்கு பிறகு இந்த இயங்குதளங்கள் கொண்டு இயங்கும் ஆப்பிள்
ஐபோன்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது.

ஐபோன் 5, ஐபோன் 5சி போன்ற மாடல்களுக்கு இதுவரை ஐஒஎஸ் 12 (ios 12) இயங்குதள அப்டேட் கிடைக்கவில்லை. எனவே இந்தஐபோன் மாடல்கள் சிக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 5 சீரிஸ் மாடல்களை இப்போதும் கூட அதிக பயனர்கள்உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் தளத்தில் பாதுகாப்புக்காக அவ்வப்போது பல அப்டேட்டுகள் வழங்கப்படுகின்றன. எனவே பழைய இயங்குதளங்களுக்கு ஒன்றியதாக வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டுகள் இருக்காது. குறிப்பாக பழைய பதிப்புகளுக்கு ஈடாக புதிய கால தொழில்நுட்பங்களை நிறுவ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் ஒரு புதிய அப்டேட்-ஐ வெளியிட உள்ளது.

இந்த புதிய அப்டேட் உதவியுடன் நீங்கள் யாருக்கும் தெரிவிக்காமல் குரூப்-ல் இருந்து சத்தமில்லாமல் வெளியேறலாம். அதன்படி வாட்ஸ்அப் குரூப்-ல் இருந்துவெளியேறும் பட்சத்தில் அந்த நபர் மட்டுமின்றி சம்மந்தப்பட்ட குரூப் அட்மினுக்கு மட்டுமே அதற்கான நோட்டிபிகேஷன் செல்லும்.

ஒருவர் குரூப்-ல் இருந்து வெளியேறி இருப்பது குரூப்-ல் உள்ள மற்றவர்களால் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் மூலம் பயனர்கள்தேவையற்ற குரூப்களில் இருந்து வெளியேறுவது எளிதாக்கப்படும்.

முன்பு ஒரு குரூப்-ல் இருந்து உறுப்பினர் வெளியேறும்போது, வாட்ஸ்அப் தானாக உருவாக்கிய அறிவிப்பை காட்டுகிறது. பின்பு இந்த தகவல் குரூப்-ல் உள்ளஅனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தும். ஆனால் இனிமேல் இந்த சிக்கல் இருக்காது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications