வதந்தி பரவுவதை தடுக்க 'அந்த திட்டத்தை' கையில் எடுத்த வாட்ஸ்ஆப்.!
ஆல் இந்தியா ரேடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் சமீபத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்று கூறவேண்டும், மேலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் இப்போது புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது,அதன்படி வாட்ஸ்ஆப் மூலம் பரப்பப்படும் வதந்திகளை முறியடித்து உண்மை நிலையை விளக்க,ஆல் இந்தியா ரேடியோவின் 46 நிலையங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம் போலி செய்திகள் அதிகமாக பரவுவதை தடுக்க, ஆல் இந்தியா ரேடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
சில நாட்களுக்கு முன்பு தவறான தகவல்களைப் பரப்பி வன்முறையையும் கலவரத்தையும் தூண்டும் சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேடியோ
இதனை தொடர்ந்து வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவிறுத்தியது. தற்சமயம் வதந்திகளை முற்றிலும் பரவுவதைத் தடுக்க ஆல் இந்தியா ரேடியோவின் உதவியை வாட்ஸ்ஆப் நிறுவனம் நாடியுள்ளது.

கூகுள்
மேலும்இப்போது கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் செய்துகொண்டுள்ள ஒப்பந்த அடிப்படையில் வாட்ஆப் தகவல்களை எவ்வளவு , வேண்டுமானாலும் கூகுள் ட்ரைவ் மூலம் பேக்அப் செய்து கொள்ள முடியும், இதற்காக எந்த கட்டுப்பாடும் இருக்காது. குறிப்பாக போனின் மெமரியும் மிச்சமாகும், பின்ப கூகுள் ட்ரைவில் மற்ற தகவல்களை சேமிக்க இடப் பிரச்சனையும் ஏற்படாது. இந்த வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15ஜிபி அளவு
15ஜிபி அளவு இப்போது வெளிவந்து தகவலின் அடிப்படையில் கூகுள் ட்ரைவில் 15ஜிபி அளவு வரையில்தான் தகவல்களை இலவசமாக சேமிக்க முடியும். அதற்கு மேல் கூகுள் ட்ரைவில் இடம்பெற கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








