சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.!
பேஸ்புக், ஜிமெயில், தொடர்ந்து பல்வேறு செயலிகயில் இந்த டார்க் மோட் அம்சம் வந்துவிட்டது, இந்நிலையில் சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது
தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது, விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வரும் என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப் பீட்டா
இப்போது ஆண்ட்ராய்டு Q வெர்ஷனில் வாட்ஸ்ஆப் பீட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு டார்க் மோட் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி செட்டங்ஸ்-டிஸ்பிளே-வழி சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12
இதேபோன்று ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் செட்டிங்ஸ்-ஜெனரல் - accessibility வழி சென்று டார்க மோட் ஆப்ஷனை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதிகாரப்பூர்வ அப்டேடாக டார்க்மோட் இருக்கும்
தற்சமயம் டார்க்மோட் ஆப்ஷனை வாட்ஸ்ஆப்நிறுவனம் சோதனை முறையிலேயே அறிமுகம் செய்துள்ளது, எனவே டார்க் மோட் ஆப்ஷனில் சில சிக்கல்கள் வரலாம் என்றும், முழு அளவில் தயாரரன பின்னரே அதிகாரப்பூர்வ அப்டேடாக டார்க்மோட் இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

டிஜிட்டல் கைரேகை
இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் போலி செய்திகள் பரப்பும் நபர் யார் என்பதை அறியய அனைத்து மெசேஜ்களுக்கு டிஜிட்டல் கைரேகை பதிவை அவசியப்படுத்தலாம் என மத்திய அரசு வாட்ஸ்ஆப் நிறுவனத்தினடம் கோரியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

போலி செய்திகளால் ..
இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலி மூலம் பரவிய போலி செய்திகளால் பலர் பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைமுறை சாத்தியம் குறைவு
பின்பு வாட்ஸ்ஆப் கொண்டுவந்த எண்ட் டு எண்ட் என்கிர்ப்சன் வசதியால், யார் முதலில் போலி செய்திகளை பரப்புகிறார்கள் எனக் கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, எனவே எண்ட் டு எண்ட் என்க்ரிப்சனை நீக்காமல் அனைத்து செய்திகளுக்கும் டிஜிட்டல் கைரேகை பதிவதன் மூலம் முதலில் ஒரு செய்தியைப் பரப்பியது யார் என கண்டறியலாம் என மத்திய அரசு கோரியுள்ள நிலையில், இதில் நடைமுறை சாத்தியம் குறைவு என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications