Just In
- 55 min ago
ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
- 11 hrs ago
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?
- 16 hrs ago
மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!
- 17 hrs ago
ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
Don't Miss
- News
2016ஐ விட பெரும் சறுக்கல்.. 11.6 சதவீதம் வாக்குகளை இழக்கிறது அதிமுக.. சர்வேயில் புது தகவல்!
- Automobiles
இதவிட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது!! ஒகினவா ஸ்கூட்டரை வாங்கினால் ரூ .1 லட்சம் பரிசு காசோலையை வெல்ல வாய்ப்பு!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…
- Finance
கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..!
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
WhatsApp எடுத்த U-டர்ன்.. இனிமேல் இதை செய்யமாட்டோம்.. பிப்ரவரி 8ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப்பை நிராகரித்து, சிக்னல் மற்றும் டெலிக்ராம் போன்ற வேறு மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களுக்கு மாறிவருகின்றனர். இதனால், இப்போது வாட்ஸ்அப் ஒரு பெரிய U-டர்ன் எடுத்துள்ளது. இதையெல்லாம் நாங்கள் செய்யமாட்டோம் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பிப்ரவரி 8-ம் தேதி காலக்கெடு இப்போது மார்ச்சுக்கு மாற்றமா?
வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக முன்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால், ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புதிய விதி ஒப்புதலுக்கு பயனர்கள் ஒப்புதல் வழங்க மார்ச் 15ம் தேதி இறுதி நாளாக இப்போது மாற்றப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப் பயனர்களின் சாட் மற்றும் கால் அம்சங்கள் எப்போதும் போல் பாதுகாப்பானது என்று நிறுவனம் கூறியுள்ளது.

புதிய அறிக்கை வெளியிட்ட வாட்ஸ்அப்
அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தனை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் வருத்தம் அடைந்த பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலியைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட்டர் வழியாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சந்தேகம் வேண்டாம்.. 100 % பாதுகாப்பு உறுதி
அதில் புதிய ப்ரைவஸி அப்டேட் ஆனது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரும் மெசேஜ்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளது. வெளிவந்த அறிக்கையின்படி, தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு 100 சதவிகித பாதுகாப்புடன் உங்கள் மெசேஜ்கள் காக்கப்படும் என்று வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் இதையெல்லாம் வேவு பார்க்காது
வாட்ஸ்அப் செயலியும், பேஸ்புக்கும் உங்களது தனிப்பட்ட மெசேஜை அணுகவோ அல்லது உங்களது அழைப்புகளை கேட்கவோ முடியாது. அதேபோல் நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள், யாருக்கு கால் செய்கிறீர்கள் என்கிற தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் சேகரிக்காது. குறிப்பாக நீங்கள் பகிரும் லோக்கேஷனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பார்க்காது என்று தெளிவாகக் கூறியுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190