ஃபார்வர்டு செய்திகளை அனுப்ப 5முறைமட்டுமே அனுமதி: வாட்ஸ்ஆப் அதிரடி.!
இதுவரை வாட்ஸ்ஆப் வதந்தியால் 20-க்கும் மேற்ப்பட்டோர், பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்நது பல்வேறு விதிமுறைகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் அந்நிறுவனம் ஃபார்வர்டு செய்திகளை அனுப்ப புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக இது வாட்ஸ்ஆப்பில் வரும் பல்வேறு வதந்திகள் பரவுவதை தடுக்கும் என்றுக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் என்ற வதந்திகளை நம்பி பலபேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் இதற்கு முழுக் காரணம் வாட்ஸ்ஆப்பில் வந்த போலித்தகவல் ஆகும். மேலும் வதந்திகளை தடுக்கவும், நீக்கவும் வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்வர்டு செய்திகள்:
தற்சமயம் வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவென்றால் ஒரு நாளைக்கு 5-பார்வர்டு செய்திகளை மட்டுமே அனுப்ப முடியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் சோதனை செய்யப்பட்டுவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் எப்போது பயனர்களுக்க வழங்கப்படும் என்ற அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை.

20-க்கும் மேற்ப்பட்டோர்:
இதுவரை வாட்ஸ்ஆப் வதந்தியால் 20-க்கும் மேற்ப்பட்டோர், பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் பரவும் வதந்திகளைத் தடுப்பது பெரிய சவாலாக இருக்கிறது' என்று மத்திய அரசுக்குப் பதிலளித்தது வாஸ்ட் ஆப் நிறுவனம்.

இந்தியா
இந்தியாவில் பல மில்லியன் மக்கள் இந்த வாட்ஸ்ஆப் செயலியை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர், மேலும் வாட்ஸ்ஆப்
மூலம் பரவும் வதந்திகள் கூட நிமிடத்திற்கு நிமிடம் தொடந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பம்
இப்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில், வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு 2-வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ்ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள்' எனப் பல கேள்விகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications