ட்ரூகாலர் அப்ளிகேஷனை உடனே டெலிட் செய்யுங்கள்: டேட்டாஸ் விற்பனை- அதிர்ச்சி தகவல்.!
ஆனால் இந்த தகவல்களை ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது, தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எதவும் ஹேக்கர்களார் திருடப்படவில்லை என்றும் அவை யாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தற்சமயம் புதிய தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களின் தகவல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என செய்தி வந்த வண்ணம் உள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர்களில் 60சதவிகதிம் முதல் 70சதவிகிதம் வரையிலான மக்கள் ட்ரூகாலர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன்ற செய்யும் நபர் யார், என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அப்ளிகேஷன் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரூகாலர் நிறுவனம்
பின்பு மக்கள் இதற்கு அளித்த ஆதரவை கண்ட ட்ரூகாலர் நிறுவனம், மேலும் சில அப்டேட்களை செய்தது, அதன்படி பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியையும் ட்ரூகாலர் அறிமுகப்படுத்தியது.

பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர்
இந்த அப்ளிகேஷன் மூலம் பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெயர் அறிய முடியாத
சில சைபர் செக்யுரிட்டி கண்காணிப்பாளர்கள் ட்ரூகாலர் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை கவனித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விற்பனை
மேலும் அதிக அளவில் பணப்பரிவர்ததனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண், இ-மெயில் ஐடி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள மோசடி கும்பல்களிடமும் இணையதள பிரோக்கர்களிடமும் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தத் தகவல்கள் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது
ஆனால் இந்த தகவல்களை ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது, தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எதவும் ஹேக்கர்களார் திருடப்படவில்லை என்றும் அவை யாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பின்பு பணப்பரிவர்தனை செய்யும் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி கூறியுள்ளது.

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஆர்17 ப்ரோ மற்றும் ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒப்போ ஆர்17 ப்ரோ மாடலுக்கு ரூ.6000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது ஒப்போ ஆர்17 ப்ரோ மாடலின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.4-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2280x1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன்:
இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710 என்.எம் செயலியை கொண்டுள்ளது, பின்பு கலர் ஒ.எஸ் 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர் மற்றும் 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு
இந்த சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் 0.41 நொடிகளில் அன்லாக் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைபை, டூயல் 4ஜி வோல்ட்இ,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ட்ரூ காலரில் மறைந்திருக்கும் அம்சங்கள்; இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.
ட்ரூ காலர் பொறுத்தவரை மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பெரிய பயனுள்ள செயலி ஆகும். குறிப்பாக ட்ரூ காலர் செயலியை இந்தியாவில் 15 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி ட்ரூ காலர் செயலி இந்தியாவில் பிரபல வங்கியான ஐசிஐசி வங்கியுடன் இணைந்து பணம் அனுப்பும் வசதியைக் கொண்டு வந்துள்ளது. மேலும் இதன் மூலம் போன்றிக்கு மிக எளிமையாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் பின்பு இதில் யு.பி.ஐ-ஐடியை உருவாக்கி இன்னொரு யு.பி.ஐ-ஐடியை கொண்ட நபருக்கு பணம் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ட்ரூ காலரில் மறைந்திருக்கும் சில சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.

பிளாக் கால்
தேவையில்லாத நமக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வந்தால் உடனே இந்த செயலி செயல்பட்டு அவற்றை பிளாக் செய்துவிடும். மேலும் டெலிமார்க்கெட்டிங், ரோபோட் அழைப்புகள் போன்றவற்றை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இந்த செயலிக்கு உண்டு. மேலும் ஒரு ஒயிட்லிஸ்ட் உருவாக்கி அதில் இருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்தி வந்தால் பிளாக் செய்யக்கூடாது என்று செட் செய்யும் வசதியும் இதில் உண்டு.

இணையம்:
உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.

ஸ்பேமர்
தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின், அந்த எண்ணுக்குரியவரை ஸ்பேமர் என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். குறிப்பாக இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

ட்ரூ டயலர்
இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம்.

தேடல் பெட்டி: எண்களை அடையாளப்படுத்தவும்
எந்த தொலைபேசி எண்ணையும் எளிமையாக அடையாளம் காண இந்த தேடல் பெட்டி (Search bar) பயன்படும் வகையில் உள்ளது. குறிப்பாக இந்த பயன்பாடும் மிக எளிமையாக இருக்கிறது.

சுயவிவரம் (profile)
உடன்இ நீங்கள் உங்கள் சொந்த சுயவிவரத்தை அமைத்து உங்களுக்கு தேவையான வழியில் தனிப்பயனாக்கலாம். இதன் பயன்பாடு என்னவென்றால் அழைப்பாளர்கள் உங்களைப் பற்றிய விவரங்களை பெற உதவுகிறது. உங்கள் தொடர்புகளின் வசதிக்காக வலைத்தளம் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற தகவல்களை நீங்கள் ட்ரூ காலரில்சேர்க்கலாம்.

தரவுத்தளம்:
இந்த ஆப் பயன்பாடானது உங்கள் தரவுத்தளத்தில் இருந்து உங்கள் எண்ணை நீக்க உதவுகிறது. நீங்கள் இந்த இணைப்பை http://www.truecaller.com/unlist ஐ பார்வையிட வேண்டும். பின்னர் நாட்டின் குறியீடு உள்ளிட்ட உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும். அடுத்து, எண் அகற்றலுக்கான காரணத்தைத் தேர்வுசெய்து, கேப்ட்சா உள்ளிட்டு, பட்டியலிடப்படாத பொத்தானைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications