மொபைல் வாலட் வசதியுடன் கூடிய ட்ரூ பேலன்ஸ் செயலி
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தனது வர்த்தக முறையை டிஜிட்டலில் மாற்றி வரும் நிலையில் ட்ரூ பாலன்ஸ் செயலி அதற்கு உறுதுணை செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் உடனடி ரீசார்ஜ் செய்த, பணத்தை டிரான்ஸ்பர் செய்தல் ஆகியவை மிக எளிது. மேலும் இந்த செயலியின் வேலட்டில் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கிலும் மாற்றி கொள்ளும் வசதியும் உண்டு. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், கூடுதல் பாதுகாப்பு திறனுடன் இதில் பணப்பரிமாற்றம் செய்யலாம்
ட்ரூ பாலன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ இதுகுறித்து கூறியபோது, 'எங்கள் செயலியை அனைவரும் உபயோகிக்கும் தருணத்தில் டிஜிட்டல் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் கைகொடுக்க ஆரம்பித்துவிட்டோம் என்பது உறுதியாகிறது.
நம்முடைய மொபைல் போனின் மூலம் இந்த புதிய வசதியால் மிக எளிதாக பணப்பரிமாற்றம் செய்யலாம். இந்த செயலி மூலம் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி இதன்மூலம் உங்களுடைய வருமானத்தையும் அதிகரித்து கொள்ளலாம்
பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் இந்த இந்த மொபைல் செயலி ஏற்கனவே 50 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஒரே ஒரு ஸ்வைப் மூலம் நீங்கள் உங்களுடைஅ ரீசார்ஜ், போன்பில், டேட்டாவின் அளவு, மொபைலில் உள்ள பேலன்ஸ், அடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேதி உள்பட பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்
இந்த செயலி 'ஒரே கிளிக்கில்-ரீசார்ஜ் அம்சம்' வழங்குகிறது, எளிதான தொலைபேசி பில்களை செலுத்த உதவுகிறது. மொபைலில் பேலன்ஸ் செக் செய்யும் செயலி மற்றும் பில் செக் செய்து அதை செலுத்தும் செயலி ஆகியவற்றின் பணியை இந்த ட்ரூ பேலன்ஸ் செயலி செய்துவிடுகிறது.
கடந்த காலத்தில், பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை ரெஃப்ரல் சிஸ்டம் / பயன்பாட்டு நடவடிக்கைகள் அல்லது சலுகைகள் மூலம் பெற்ற கடன் அல்லது பற்று அட்டை அல்லது புள்ளிகளைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்தனர்.
இப்போது, ட்ரூபேலன்ஸ் மொபைல் செயலி பணப் பயனர்கள் தங்களது உண்மையான இருப்பு பணப்பைக்கு எளிதாக பணம் செலுத்துவதன் மூலம் எளிதாக தொலைபேசி ரீசார்ஜ்களை எளிதாக்குகிறது.


Click it and Unblock the Notifications