டிக்டாக் சாகசத்தில் நேர்ந்த பரிதாபம்: கழுத்தை உடைத்து கொண்ட இளைஞர்.!
இதுபோல கர்நாட மாநிலம் துமகூரு அருகே ‘டிக்-டாக்’கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் கழுத்து எலும்பு முறிந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி ஏராளமான இளைஞர்கள் சாதனைகளை செய்து வருகின்றனர். இது அடுத்த வினாடியே மக்களிடம் கொண்டு சேர்த்து விடுகின்றது. மேலும், இதன் மூலம் இளைஞர்கள் மாஸாக வலம் வருகின்றனர்.
சமூகத்தில் நல்ல அந்தஸ்தையும் அவர்களுக்கு பெற்றுத்தருகின்றது. ஒரு சிலர் டிக் டாக் ஆப்பை தவறான வழிக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இளைஞர்கள், இளைஞர்களையும் இதுபோன்ற சாகசங்கள் செய்யும், பாடலை பாடி அசத்தவும் டிக் டாக் ஆப் ஊக்கமளிக்கின்றது.

இந்நிலையில் ஒரு சிலர் டிக்டாக்கில் மாஸாக வலம் வரவேண்டும் என்று இளைஞர்கள் ஏதேதோ ஏதேதோ செய்ய போகி அது கடைசியில் அவர்களின் உயிருக்கே ஆபத்தாகி முடிந்த சம்பவமும் நடந்துள்ளது.
இதுபோல கர்நாட மாநிலம் துமகூரு அருகே 'டிக்-டாக்'கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் கழுத்து எலும்பு முறிந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அந்த இளைஞர் செய்த சாகச வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் பிரபலம்:
டிக்-டாக் இன்று மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த ெசயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் டிக்-டாக் செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள்.

வீடியோவாக பதிவு:
இன்னும் சிலர் சாகசங்கள் செய்து வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறு சாகசகங்கள் செய்வது சில நேரங்களில் ஆபத்தாக மாறிவிடுகிறது. அதுபோன்ற சம்பவம் தான் துமகூரு மாவட்டத்தில் நடந்துள்ளது.

இளைஞரின் சாசக நடனம்:
துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா கோடேகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 26).
இவர், டிக்-டாக் செயலியில் பாடல்கள் பாடியும், நடனம் ஆடியும் வீடியோ பதிவிட்டு உள்ளார். இவர் சாகசம் செய்வது போன்ற வீடியோ பதிவிட முடிவு செய்தார்.
கழுத்து எழும்பு முறிந்த சோகம்:
அதன்படி, அவர் தனது நண்பரின் உதவியுடன் சாகசத்தில் ஈடுபட முயற்சித்தார். அதாவது, சிறிது தொலைவில் இருந்து ஓடிவரும் குமார் தனது நண்பரின் உதவியுடன் தரையில் கைகள் படாமல் பின்புறமாக பல்டி அடிக்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குமாரின் தலை தரையில் போய் இடித்தது. இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டதோடு, கழுத்து எலும்பு முறிந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை:
இதனால் அவர் தரையிலேயே படுத்து கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இளைஞர்களுக்கு பாடம்:
இந்த நிலையில் குமார் டிக்-டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்து தலைகீழாக கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், திறமையை நிருபிப்பதாக கருதி அவர்கள் டிக்டாக்கிற்காக புகழக்காக உயிரை பிணயமாக வைப்பது முட்டாள் தனமானது. இதை நன்கு இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். எந்த வித பயிற்சியில் இல்லாமல் எடுத்த எடுப்பில் இதுபோன்று செய்யக் கூடாது.


Click it and Unblock the Notifications