வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் செய்யும் அட்டூழியம்: புதிய ஆப்பில் அதிர்ச்சி தகவல்.!
எனினும் செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ள புதிய பிழை, செயலியில் அனுப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பில் போலி செய்திகள் பரப்பியதையடுத்து, அதை தடுக்கும் நோக்கில் வாட்ஸ் ஆப் செயலிலி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

நாம் பார்வேர்டு செய்யும் போது பார்வேர்டெட் லேபில் இடம் பெறுகிறது. தற்போது அதை ஹேக்கர்கள் நமது மெஸ்சேஜ்களை படிப்பதோடு அல்லாமல் அதை மாற்றவும் செய்து வருகின்றனர்.

செக் பாயிண்ட் ஆராய்ச்சியாளர்:
எனினும் செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ள புதிய பிழை, செயலியில் அனுப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட உரையாடல்களும்:
தற்போதைய செயலியின் தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் மெஞ்சேஜ்ககைகளையும், குரூப் சாட்டிங் உள்ளிட்டவைகளையும் அவர்கள் ஹேக் செய்து, மாற்றியும் விடுகின்றனர்.

மூன்று வழிகளில் பாதிப்பு ஏற்படுத்தும்:
* ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரைவிக்காத தகவல்கள் தெரிவித்தாக மாற்றியமைக்க முடியும்.
* குரூப்பில் இருக்கும் ஒருவர் அனுப்பியமாக தகவல் ஒன்ற அனுப்ப முடியும். இது குரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.
* தனிப்பட்ட உரையாடல் ஒன்ற குரூப் சாட்டில் காணப்பிக்கவும் செய்ய முடியும். இவ்வாறு செக் பாயிண்ட் இணையதளத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு தகவல்:
புதிய பிழை குறித்து வாட்ஸ் ஆப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்ட்டுள்ளதாகவும் வாட்ஸ் ஆப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications