தடையால் தினமும் 5லட்சம் டாலர் வருவாய் இழந்து தவிக்கும் டிக்டாக்.!
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு நாளைக்கு 5 லட்சம் டாலர் வருவாய் இழப்பு ஏற்படுதாக சீனாவைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 3,49,33,000 வருவாய் இழப்பு ஏ
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு நாளைக்கு 5 லட்சம் டாலர் வருவாய் இழப்பு ஏற்படுதாக சீனாவைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இந்திய மதிப்பில் ரூ. 3,49,33,000 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

டிக் டாக் செயலி:
டிக் டாக் செயலில் ஏராளமான டப்ஸ் ஸ்மேட்கள் வந்தன. இதில் பெண்கள் ஆபாச நடனம் அரங்கேறின. தமிழகத்தில் இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலாக இருக்கின்றது என்று அரசியல் கட்சிகள் போர் கொடி தூக்கி. இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
உடனடியாக டிக்டாக் செயில்லை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தன.

கோர் தடை உத்தரவு பிறப்பு:
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
டிக்டாக் செயலி பொதுமக்களுக்கு தீமையை விளைவிப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், அந்த செயலிக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

உடனடியாக டிக்டாக் செயலி நீக்கம்:
இதையடுத்து ஆப்பிள் மற்றும் குகூல் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. தடை உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில்,உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு இணங்க, இந்த வழக்கு புதன்கிழமை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.

5 லட்சம் டாலர்கள் இழப்பு:
டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், நாளொன்றுக்கு 5 லட்சம் டாலர் ( 3,49,33,000 ) வருவாய் இழப்பு ஏற்படுவதாக சீனாவை சேர்ந்த பைட்டேன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

250 பேர் வேலை இழக்கும் நிலை:
இது தொடர்பாக அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தடை காரணமாக 250க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications