ஜூம் செயலிக்கு போட்டியாக களமிறங்கிய வி-கன்சோல்.! என்னென்ன சிறப்பு.!
இந்தியாவில் ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் மூலம் தான் வீடியோ கான்ஃபரன்ஸ் எனும் ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. அதுவும் கொரோனா லாக்டௌன் காரணமாக இதுபோன்ற செயலிகள் அதிக பிரபலம் ஆனது. குறிப்பாக இப்போது கூட பல்வேறு
அலுவலகங்கள் இந்த செயலிகள் மூலம் தான் ஆலோசனை கூட்டங்கள் நடத்துகின்றன.

மேலும் இந்த ஜூம் செயலி மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன, இருந்தபோதிலும் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்றுதான்
கூறவேண்டும். இந்த நிலையில் ஜாய் என்பவர் கடந்த 2000-ம் ஆண்டில் அவெனீர் எனும் நிறுவனத்தில் வலை ஆடியோ கான்பரன்சிங்கை
தொடங்கினார், தொடர்ந்து 2009-ல் டெக்ஜன்சியாவைத் தொடங்கினார். தற்போது வீடியோ கான்பரன்சிங் களத்தில் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி சேர்த்தலாவை சேர்ந்த டென்ஜென்சியா என்ற ஐடி நிறுவனம் உருவாக்கிய வி-கன்சோல், இப்போது இந்திய அரசின்அதிகாரப்பூர்வ வீடியோ கான்பரன்சிங் பார்ட்னராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக சர்ச்சைக்குரிய ஜூம் செயலிக்கு மாற்றாக மத்திய அரசு நடத்திய இந்த புதுமையாக சாவலில் வீடியோ கான்பரன்சிங் ஆப் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்த செயலியில் சுமார் 80 பங்கேற்பாளர்களும்,செயலற்ற நிலையில் 300 பங்கேற்பாளர்களும் இடம்பெற்றனர்.

இந்த வி-கன்சோல், அரசாங்க கூட்டங்களின் வீடியோ கான்பரன்சிங்கிற்கு வெளிநாட்டு செயலிகளுக்கு மாற்றகப் பயன்படுத்தப்படும். பின்பு இந்தியாவின் தற்சார்பு திட்டத்தின் கீழ் பங்களித்ததில் பெருமிதம் கொள்வதாக டெக்ஜென்சியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குநருமான ஜாய் செபாஸ்டியன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெக்ஜென்சியா கேரளாவின் பல திட்டங்களில் தொழில்நுட்ப பங்காளராக செயல்படுகிறது. பின்பு 2018-ம் ஆண்டு கேரளா வெள்ளப்பெருக்கின்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு செயலிகளை உருவாக்கி இந்தநிறுவனம் முக்கிய பணியை செய்தது.

மேலும் டெலிமெடிசின், ஆன்லைன் கல்வி, பள்ளி டிஜிட்டல் மயமாக்கல், காய்கறி திரட்டலுக்கான தகவல் தொழில்நுட்ப தளங்கள் மற்றும் பல சாஃப்ட்வேர்களையும் உருவாக்கியுள்ளது. இந்த ஐடி நிறுவனத்திற்கு இந்த செயலியை உருவாக்க மற்றும் மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிக்க ரூ.1 கோடி மேலும் 10லட்சம் பெற்றள்ளது. பின்பு உலகளவில் சந்தைப்படுத்துதலும் இதற்கு இலவசம்.

இந்த செயலியில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையில் படத்தின் தரம் பாதிக்கப்படாது,பின்பு 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்ஒரே நேரத்தில் கலந்துக் கொள்ளலாம். அதன்பின்பு 300-க்கும் மேற்பட்டோர் பார்க்கலாம். 100சதவீதம் பாதுகாப்பானது.


Click it and Unblock the Notifications