Google Maps சொன்னா சரியா தான் இருக்கும் என்று நம்பி போனவர் கதி.. கண்மூடித்தனம் வேண்டாம் மக்களே..!
கூகிள் மேப்ஸ் பொய் சொல்லாது என்று கண்மூடித்தனமாக நம்பும் சிலருக்கு, இந்த செய்தி நடைமுறையில் ஏற்படக்கூடும் சிக்கலின் உண்மையை போட்டு உடைதுள்ளது என்பதை நம்ப சற்று கடினமாக இருக்கலாம். இன்னும் சில அனுபவசாலிகளுக்கு இந்த செய்தி, ''இப்படியெல்லாம் ஒரு நாள் நடக்குமென்று எங்களுக்கு தெரியும்'' என்ற ஒரு மனநிலையை உருவாகலாம். எது எப்படியாக இருந்தாலும் கூகிள் மேப்ஸ் மீது எப்பொழுதும் முழு நம்பிக்கை வைக்காதீர்கள்.

கூகிள் மேப்ஸ் காரணமாக நிகழ்ந்த சிக்கல் சம்பவங்கள்
கூகிள் மேப்ஸ் பயன்படுத்தும் மக்களில் சிலர் தங்களின் சரியான இலக்கை அடைவதற்கு பல நேரங்களில் சிலவிதமான சிக்கல்களைச் சந்தித்திருப்பார்கள். உலகெங்கிலும் இதுபோன்ற பல சிக்கல் சம்பவங்கள் கூகிள் மேப்ஸ் காரணமாக நிகழ்ந்துள்ளது. இந்தியாவிலும் இப்படி ஒரு சிக்கல் சம்பவம் இப்பொழுது நடந்துள்ளது, இந்த சம்பவம் இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள மிகவும் மோசமான கூகிள் மேப்ஸ் சம்பவமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய டாடா ஹாரியர் எக்ஸ்எம் காரின் நிலை
இந்த சம்பவம் T-Bhp இல் ஷிஷிர் 333 ஆல் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அவரின் நெருங்கிய நண்பருக்கு நிஜத்தில் நடந்துள்ளது. புதிய டாடா ஹாரியர் எக்ஸ்எம் காரின் உரிமையாளர் புனேவிலிருந்து ஜபல்பூருக்கு இரவில் பெற்றோருடன் பயணம் செய்திருக்கிறார்.

கூகிள் மேப்ஸின் உதவி
காரின் உரிமையாளர் முதன்முறையாக இதுபோன்ற நீண்ட தூரப் பயணத்தைச் சொந்த வாகனத்தில் மேற்கொண்டிருக்கிறார், பாதைகள் சரியாகத் தெரியாத காரணத்தினால் கூகிள் மேப்ஸ் பயன்படுத்தியிருக்கிறார்.கூகிள் மேப்ஸின் உதவியுடன் காரின் உரிமையாளர் புனேவிலிருந்து காலை 9 மணிக்குத் கிளம்பி பயணத்தைத் துவங்கியிருக்கிறார்.

கூகிள் மேப்ஸ் ரூட்டை மாற்றியது
நீண்ட பயணம் என்பதனால் அன்றிரவு நாக்பூரில் நிறுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார், கூகிள் மேப்ஸின் தகவல் படி, அவர் அன்றிரவு 11 மணிக்குள் இலக்கை அடைந்துவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவான வழி என்று கூகிள் மேப்ஸ் ரூட்டை மாற்றி காட்ட, இவரும் கண்மூடித்தனமாக அந்த பாதையில் பயணித்திருக்கிறார்.

கூகிள் மேப்ஸ் சொன்ன சரியா தான் இருக்கும்
கூகிள் மேப்ஸ் காட்டிய மாற்று வழி, அமராவதிக்கு அருகிலுள்ள பிரதான சாலையிலிருந்து திசை திருப்பப்பட்டு, இருண்ட மற்றும் குறுகிய சாலை கொண்ட மோசமான பாதையில் அவரை செல்லும்படி கூகிள் மேப்ஸ் வழி நடத்தியுள்ளது. கூகிள் மேப்ஸ் சொன்ன சரியா தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரும் அதிகம் யோசிக்காமல் மாற்று வழியைப் பின்பற்றியிருக்கிறார்.

மோசமாகச் சேதமடைந்த பாலம்
சாலைகள் நல்ல நிலையில் இல்லை என்பதை உணர்ந்தும் அவர் கூகிள் மேப்ஸ் மீதான நம்பிக்கையில் முன்னேறி செண்டிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் சுமார் 20 கி.மீ தூரத்தைக் கடந்த பிறகு அந்த வழியிலிருந்த பாலம் சேதமடைந்துள்ளதைக் கவனித்திருக்கிறார். மோசமாகச் சேதமடைந்த பாலத்தின் இடதுபுறத்திலிருந்த வழியில் சென்ற காரின் டயர்களில் பிடிப்பு இழந்து, வாகனம் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது.

அதிகாலை 2:30 மணிக்கு உதவி
சுமார் 30 நிமிடங்கள் பள்ளத்திலிருந்து வெளியேற முயன்றும் பயனில்லாமல் வாகனம் ஆழமான சேற்றில் சிக்கிக்கொண்டது. எஞ்சின் சூடாகி புகை வந்துவிட்டது, கிளட்ச் எரியும் வாசனையும் வந்திருக்கிறது, ஹெட்லேம்ப்களும் வேலை செய்யாமல் போனது என்று உரிமையாளர் கூறியுள்ளார். அதிகாலை 2:30 மணிக்கு சாலையோர உதவி கிடைத்த பின்னர் ஹெட்லேம்ப் இல்லாமல் நகரத்திற்கு வந்துள்ளனர்.

கண்மூடித்தனமாகப் பயணம் செய்யாதீர்கள்
கூகிள் மேப்ஸ் எப்பொழுதும் நகரத்திற்குள் சரியான வழியைத் தான் காண்பிக்கிறது. சில நேரங்களில் இப்படியான சிக்கல்கள் நடப்பதைத் தவிர்க்க நீங்கள் செல்லும் பாதையை ஒருமுறை பார்த்துவிட்டுப் பயணிக்கத் துவங்குங்கள். முழுமையாகக் கூகிள் மேப்ஸை நம்பி, கண்மூடித்தனமாகப் பயணம் மேற்கொண்டு தேவையில்லாத சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

"Google Map பொய் சொல்லாது" செங்குத்து பாதையில் சிக்கிய வேன்: கடைசியில் நடந்த அதிர்ச்சி
கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று சரிவு பாதையில் சிக்கியதோடு இரவு முழுவதும் அதே வழியில் வாகனத்தை எந்த புறமும் இயக்கமுடியாமல் சிக்கியுள்ளார்.

ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம்
முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாக செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுப்படுத்தி விடுவார்கள்.

கோமாளி திரைப்படத்தின் காட்சி
இதுபோன்ற வழிதேடும் காட்சி ஒன்று கோமாளி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும். அதில் ஜெயம்ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் பயணிப்பனர். அப்போது கூகுள் மேப் காட்டும் வழியை வைத்து செல்லுகையில் இறுதியாக மயானத்தில் வந்து முடியும் இந்த காட்சி சமூகவலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது. அதன்பின் ஆட்டோ டிரைவரிடம் கேட்டுதான் சரியான பாதையில் செல்வார்கள்.

வாஸ்கோட காமாவாக மாறும் நண்பர்
தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும் போது வழி தெரிந்த நண்பர் ஒருவர் முன்னாள் சென்று வழிகாட்டுவது வழக்கம். அப்படி காட்டும் வழி சில சமயங்களில் தவறாகும் பட்சத்தில் இவரு பெரிய வாஸ்கோட காமா முன்னாடி சென்று வழிகாட்டுகிறார். அப்படி என்று கிண்டல் செய்வதை கேள்விபட்டிருப்போம்.

கண்ண மூடிகிட்டு போகலாம்
இப்போதெல்லாம் வாஸ்கோட காமாவும் இல்ல, ஆட்டோ டிரைவரும் இல்ல, கண்ண மூடிகிட்டு போகலாம் என்ற மாதிரி ஆரம்ப இடம் முடியும் இடம் இரண்டையும் டைப் செய்து கூகுள் மேப் உதவியுடனே செல்கின்றனர்.

தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்று வளர்ச்சி தேவைதான் என்றாலும், தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது.இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து குரூப் வேன் ஒன்று வார விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வந்தனர்.

ஓட்டுநர் உணவு அருந்தி வண்டியை எடுத்து சென்றுள்ளார்
இவர்கள் ஊட்டி படகு மூலம் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்க முன்கூட்டியே புக் செய்துள்ளனர். இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் விடுதியில் இறக்கிவிட்டு வேன் ஓட்டுநர் உணவு அருந்தி வண்டியை பார்க் செய்வதற்கு விடுதிக்கு வந்துள்ளார்.

ஜிபிஎஸ் மூலம் கூகுள் மேப்
அப்போது மொபைல் போனை பயன்படுத்தி ஜிபிஎஸ் மூலம் கூகுள் மேப் பயன்படுத்தி வாகனத்தை இயக்கியுள்ளார். மேப் காண்பிக்கு வழியிலே சென்ற டிரைவர் குறுகிய பாதை ஒன்றில் சென்றுள்ளார். பாதை குறுகியதாக இருக்கிறதே என்று மனதில் ஒரு குழப்பம் இருந்தாலும் கூகுள் மேப் பொய் சொல்லாது என்று ஒரு நம்பிக்கை வாகனத்தை தொடர்ந்து இயக்கி உள்ளார்.

செங்குத்து பாதையில் சிக்கிய ஓட்டுனர்
அந்த பாதை செங்குத்தாக கீழே இறங்கியுள்ளது வாகனத்தை மெதுவாக இயக்கி வந்த ஓட்டுநருக்கு திடீரென அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பாதையின் ஒரு கட்டத்தில் இரும்பு தூன்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வாகனத்தை பின்னால் எடுக்க முயற்சித்துள்ளார். பாதை செங்குத்தாக இருந்ததால் வாகனம் பின்னால் எடுக்க முடியவில்லை.

வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கிய ஓட்டுனர்
இதையடுத்து வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது தான் தெரிந்துள்ளது. அடுத்த சில மீட்டர் தூரத்தில் ரயில்வே தண்டவாளம் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, வாகனத்தை முன்புறமும் இயக்கமுடியாமல் பின்புறமும் இயக்கமுடியாமல் சிக்கியுள்ளது.

கிரேன் உதவியுடன் மீட்பு
இதன்பிறகு காலை 11 மணியளவில் கிரேன் உதவியுடன் மீட்டுள்ளனர். இரவு முழுவதும் வாகன ஓட்டுநர் நடுவில் மாட்டுக் கொண்ட சம்பவம் பரிதாபமானது என்றும் இதுபோன்ற பாதைகள் இருக்கும் இடத்தில் பலகை வைக்க வேண்டும் என்ற பிற ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Click it and Unblock the Notifications